/* */

கொரோனா உயிர்ப்பலி இல்லாத மாவட்டமாக மாறும் திருச்சி

கொரோனாவால் உயிரிழப்பு இல்லாத மாவட்டமாக திருச்சி மாறி வருவது மக்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

HIGHLIGHTS

கொரோனா உயிர்ப்பலி இல்லாத மாவட்டமாக மாறும் திருச்சி
X

திருச்சி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. இன்று திருச்சி மாவட்டத்தில் 48 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு எதுவும் இல்லை. நேற்று 51 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். உயிரிழப்பு எதுவும் இல்லை. அதற்கு முந்தைய நாளான 25-ம் தேதி 54 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். உயிர்பலி எதுவும் இல்லை.

அந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்று உயிர்பலி எதுவும் இல்லை என்ற தகவல் மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக உள்ளது.

அதே நேரத்தில் கடந்த 24-ம் தேதி திருச்சி மாவட்டத்தில் 73 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். ஒரே நாளில் 3 பேர் பலியாகி இருந்தது அன்றைய தினம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

மாவட்ட நிர்வாகம் எடுத்து வரும் தொடர் நடவடிக்கைகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ,தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வு காரணமாக திருச்சி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருவது விரைவில் கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக மாறுமா? என்ற ஒருவித எதிர்பார்ப்பை மக்களிடம் ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 27 Sep 2021 3:35 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    எப்போதும் குழந்தைகளுடன் உறங்கும் பெற்றோரா நீங்கள்? இதை படியுங்க..!
  2. லைஃப்ஸ்டைல்
    மனைவியுடன் சண்டையில் கணவன் தோற்பது சகஜமப்பா..! அது பெருந்தன்மை..!
  3. மானாமதுரை
    வெளி நாட்டில் வேலைக்கு சென்ற கணவரை மீட்க , மனைவி மனு!
  4. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான சுவையில் வாழைப்பூ வடை செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    பல் பிரச்னைகளுக்கு வீட்டு வைத்தியம் என்னென்ன?
  6. குமாரபாளையம்
    பேருந்து நிலையத்தில் இட பற்றாக்குறை, வழியில் நிற்கும் பேருந்துகளால்...
  7. லைஃப்ஸ்டைல்
    நொச்சி இலையின் மருத்துவ குணங்கள் பற்றி தெரியுமா?
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து வசதி இல்லை;...
  9. கிணத்துக்கடவு
    கேரளாவில் பறவை காய்ச்சல் ; கோவை மாவட்ட எல்லைகளில் சோதனை தீவிரம்
  10. வணிகம்
    வியாபாரத்தில் தரமும் நம்பிக்கையும் இரண்டு கண்கள்..!