/* */

திருச்சியில் மழை நீர் வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணி: கலெக்டர் ஆய்வு

திருச்சியில் நடந்து வரும் மழை நீர் வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணிகளை கலெக்டர் சிவராசு ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

தமிழகத்தில் உள்ள நீர்நிலைகள்,வரத்து வாய்க்கால்கள், மழைநீர் வடிகால் வாய்க்கால்களில் உள்ள தடைகளை அகற்றி வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக அவற்றை தூர்வார வேண்டும் என முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவின் அடிப்படையில் திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மாபெரும் மழைநீர் வடிகால் சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. திருச்சி மாநகராட்சி அபிஷேகபுரம் கோட்டம் 52 -வது வார்டு வயலூர் சாலையில் உள்ள கத்தரிக்காய் மழைநீர் வடிகால் வாய்க்கால் தூர்வாரும்பணி இன்று நடைபெற்றது.

பொக்லைன் எந்திரங்கள் உதவியுடன் நடைபெற்ற இந்த பணியை திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மாநகராட்சி ஆணையர் முஜிபூர் ரகுமான், மாநகராட்சி நகர பொறியாளர் அமுதவல்லி, பொறியாளர் சிவபாதம் ஆகியோர் உடனிருந்தனர்.

Updated On: 21 Sep 2021 10:36 AM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டதை கண்டித்து கோவையில்...
  2. கோவை மாநகர்
    ஏப்ரல் 28-ம் தேதி ஒரே நாளில் 4 இடங்களில் மிளகு சாகுபடி குறித்த...
  3. லைஃப்ஸ்டைல்
    செரிமான பிரச்சனையா? சாப்பிட்ட பின் இவற்றை சேர்த்துக்கொள்ளுங்கள்
  4. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே பைக் மீது லாரிமோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
  5. ஆன்மீகம்
    குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோயிலில் மே1-ல் குரு பெயர்ச்சி...
  6. லைஃப்ஸ்டைல்
    தினமும் 'பிளாங்க்' - உடலில் ஏற்படும் மாற்றங்கள்
  7. அவினாசி
    அவிநாசி, அரசு கலை அறிவியல் கல்லூரியில் 2வது பட்டமளிப்பு விழா
  8. வீடியோ
    🔴LIVE : 150-வது ஆண்டுக்கு அடியெடுத்து வைக்கும் இந்திய வானிலை ஆய்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    ஜல்லிக்கட்டு பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  10. லைஃப்ஸ்டைல்
    அன்பும், தியாகமும், வாழ்நாள் பயணமும்: அப்பா அம்மா திருமண நாள்...