/* */

திருச்சி: ஊரக உள்ளாட்சி தேர்தலில் 24 பதவிகளுக்கு 74 பேர் போட்டி

திருச்சி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலில் 24 பதவிகளுக்கு 74 பேர் வேட்பு மனு தாக்கல் செய்து உள்ளனர்.

HIGHLIGHTS

திருச்சி: ஊரக உள்ளாட்சி தேர்தலில் 24 பதவிகளுக்கு 74 பேர் போட்டி
X

திருச்சி மாவட்டத்தில் 2 ஊராட்சி தலைவர் பதவிக்கும், 3 ஊராட்சி ஒன்றிய வார்டு குழு உறுப்பினர் பதவிக்கும், 19 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் என மொத்தம் 24 ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிகளுக்கு அக்டோபர் 9-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கான வேட்புமனுத்தாக்கல் கடந்த 15-ம் தேதி தொடங்கியது. இன்று வேட்புமனு தாக்கல் செய்ய இறுதி நாளாகும். நேற்றுவரை இந்த 24 பதவிகளுக்கும் 50 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இறுதி நாளான இன்று வேட்புமனுத்தாக்கல் கடும் விறு விறுப்பு ஏற்பட்டது.

துறையூர் ஊராட்சி ஒன்றியத்தில் வார்டு எண் 13, வையம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 6-வது வார்டு, மருங்காபுரி ஊராட்சி ஒன்றியத்தில் 10-வது வார்டு க்கும் நடைபெறவுள்ள தேர்தலில் அரசியல் கட்சிகள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

இன்று மட்டும் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 27 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். ஊராட்சி தலைவர் பதவிக்கு 4 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 19 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். ஆக மொத்தம் மாவட்டத்தில் காலியாக உள்ள 24 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு 74 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர் என திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு தெரிவித்து உள்ளார்.

Updated On: 22 Sep 2021 4:36 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    காற்றின் அலைவரிசையில் கடவுளோடு பேசுவோம்..!
  2. தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
  3. திருமங்கலம்
    சோழவந்தானில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர்...
  4. கோயம்புத்தூர்
    தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில்...
  5. தமிழ்நாடு
    எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை...
  6. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை
  7. தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் வரவேற்பு
  8. லைஃப்ஸ்டைல்
    கில்லில சொல்லி அடிக்கிறமாதிரி, சொல்லி ஜெயிச்சிக்காட்டுங்க..!
  9. தமிழ்நாடு
    திருச்சி உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் ஆஜர்
  10. தொண்டாமுத்தூர்
    நொய்யல் ஆற்றில் இருந்து முறைகேடாக தண்ணீர் எடுப்பதாக விவசாயிகள்...