/* */

மன இறுக்கம் குறைய அரவணைப்பு அவசியம்: கருத்தரங்கில் தகவல்

மன இறுக்கம் குறைய அரவணைப்பு அவசியம் என்று, திருச்சியில் நடைபெற்ற இணையவழி கருத்தரங்கில் அறிவுறுத்தப்பட்டது.

HIGHLIGHTS

மன இறுக்கம் குறைய அரவணைப்பு அவசியம்: கருத்தரங்கில் தகவல்
X

டாக்டர் மாத்ருபூதம்

திருச்சி சந்தானம் வித்யாலயா பள்ளி, லலிதா நர்சிங் ஹோம் மற்றும் சியாமளா நர்சிங் ஹோம் இணைந்து 'பெருந்தொற்று காலத்தில் குழந்தைகளின் ஆரோக்கியமும் கல்வி கற்கும் சூழலும்' என்ற தலைப்பில் இணையவழி கருத்தரங்கம் நடந்தது. இதில், பள்ளி செயலாளர் முனைவர் மீனா, தலைமை தாங்கினார். தலைமை செயல் அதிகாரி சந்திரசேகரன், இயக்குனர் அபர்ணா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், டாக்டர் மாத்ருபூதம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில், குழந்தைகளின் மன இறுக்கம், சோர்வு குறைவதற்கு, பெற்றோரின் அரவணைப்பும், ஆதரவும் அவசியம் தேவை. குழந்தைகளிடம் மனம் விட்டு பேசி சூழ்நிலைகளை விளக்கி சொல்ல வேண்டும். உன்னால் முடியும் பயப்படாதே என்று கூறவேண்டும். குழந்தைகளின் நலனுக்காக ஆசிரியர்கள், பெற்றோர்கள் கைகோர்த்து செயல்பட்டால் நல்லது என்றார்.

கருத்தரங்கில், பள்ளி முதுநிலை முதல்வர் பத்மா, முதல்வர் பொற்செல்வி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி துணை முதல்வர் ரேகா நன்றி கூறினார்.

Updated On: 11 Sep 2021 4:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ரமழான் ஒவ்வொரு இஸ்லாமியர்களின் இதயத்தை நிரப்பும் பண்டிகை..!
  2. சங்கரன்கோவில்
    சங்கரன்கோவில் அருகே தேர்தல் புறக்கணிப்பு! 1000 ஓட்டுகளில் 1௦ மட்டுமே...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘என்றாவது ஒரு நாள், நான் இல்லாமல் போவேன்’ - மனிதர்களுக்கு மரணம்...
  4. லைஃப்ஸ்டைல்
    எமை ஈன்றெடுத்த தாய்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்து..!
  5. லைஃப்ஸ்டைல்
    பாசத்துடன் பண்பினை புகட்டிய தாத்தா..!
  6. லைஃப்ஸ்டைல்
    ஈடு செய்ய இயலாத இழப்பின் கொடூரம் - மரணத்தின் வலிகள் குறித்த...
  7. லைஃப்ஸ்டைல்
    நாம் வணங்கும் நேர் கண்ட தெய்வம், அப்பா..!
  8. கோவை மாநகர்
    கோவையில் ஒரு இலட்சம் பெயர்கள் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து...
  9. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் மாலை 5 மணி நிலவரம்: 71.44 சதவீதம்...
  10. கவுண்டம்பாளையம்
    கவுண்டம்பாளையம் பகுதியில் 830 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதாக...