/* */

திருச்சி இறைச்சிக் கடைகளுக்கு மாநகராட்சி திடீர் எச்சரிக்கை

திருச்சி இறைச்சி கடைகளுக்கு மாநகராட்சி திடீர் எச்சரிக்கை விடுத்துள்ளது.

HIGHLIGHTS

திருச்சி இறைச்சிக் கடைகளுக்கு மாநகராட்சி திடீர் எச்சரிக்கை
X

திருச்சி மாநகராட்சி அலுவலகம்  (பைல் படம்)

திருச்சி மாநகராட்சி பகுதிகளில் செயல்பட்டு வரும் மீன்கடைகள் , கோழி கடைகள் , இறைச்சி கழிவுகள் முதலிய கழிவுகளை ஆங்காங்கே உள்ள நீர்நிலைகள், காலி இடங்கள் மற்றும் சாலை ஓரங்களில் இரவு நேரங்களில் கொட்டி சுகாதார கேடு ஏற்படுத்துவதாக பொது மக்களிடமிருந்து புகார்கள் பெறப்பட்டுள்ளது.

இதை தவிர்க்கும் பொருட்டு திருச்சி மாநகராட்சி பகுதிகளில் உள்ள நுண்உர செயலாக்க மையங்களில் இறைச்சி கழிவுகளை பெறுவதற்கென பிரத்யோக வசதியுடன் தொட்டி வைக்கப்பட்டுள்ளது .

அனைத்து இறைச்சி கடை உரிமையாளர்கள் தங்கள் கடைகளில் தினசரி சேரும் இறைச்சி கழிவுகளை அருகிலுள்ள நுண்உர செயலாக்க மையங்களில் தங்களது சொந்த பொறுப்பில் நேரடியாக கொண்டு வந்து பதிவு செய்து ஒப்படைக்க வேண்டும்.

இறைச்சி கழிவுகளை மேற்கண்ட நுண்உரம் செயலாக்க மையங்களில் ஒப்படைக்காமல் பொது இடங்கள் , நீர் நிலைகள் , காலி இடங்கள் மற்றும் சாலை ஓரங்களில் கொட்டும் இறைச்சி கடைகளுக்கு அபராதம் விதிப்பதுடன் இறைச்சி கடைகள் பூட்டி சீல் வைக்கப்படும் என மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 13 Jun 2021 2:03 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?