/* */

திருச்சி விமான நிலையத்தில் பயணியிடம் ரூ.50 லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் பயணியிடம் இருந்து ரூ.50 லட்சம் அமெரிக்க டாலர், துபாய் தினார் பறிமுதல் செய்யப்பட்டது.

HIGHLIGHTS

திருச்சி விமான நிலையத்தில் பயணியிடம் ரூ.50 லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல்
X

திருச்சி விமான நிலையத்தில் இருந்து நேற்று ஷார்ஜா புறப்பட்டு செல்வதற்காக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று தயாராக இருந்தது. இந்நிலையில் விமானத்தில் ஏற இருந்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்போது சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த சுப்பிரமணி மகன் சரவணன் (வயது 43) என்ற பயணியின் உடைமைகளை சோதனை செய்த போது ரூ. 50 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலர் மற்றும் துபாய் தினார் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அவரை பிடித்து விசாரணை நடத்தியதில் அதனை சார்ஜாவுக்கு கடத்தி செல்ல முயன்றது தெரியவந்தது. இதை தொடர்ந்து சுங்கத் துறை அதிகாரிகள் அந்த வெளிநாட்டு பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 23 Sep 2021 4:45 AM GMT

Related News