/* */

திருச்சி விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்த முயன்ற வாலிபர் கைது

திருச்சி விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்த முயன்ற வாலிபரை கைது செய்து 10 கிலோ போதைப்பொருளை பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

திருச்சி விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்த முயன்ற வாலிபர் கைது
X
திருச்சி விமான நிலையம் (பைல் படம்)

மலேசியா, சிங்கப்பூர், சவுதி அரேபியா போன்ற வெளிநாடுகளுக்கும், வெளிநாடுகளில் இருந்து திருச்சிக்கும் சிறப்பு மீட்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் திருச்சியில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களோடு கொரியர் மூலம் போதைப்பொருட்கள் அனுப்பப்பட உள்ளதாக மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் திருச்சியில் இருந்து வெளிநாட்டிற்கு கொரியர் அனுப்ப வந்த ஒரு நபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர், சுமார் 10 கிலோ எடை கொண்ட கவர் ஒன்றை கொரியர் மூலம் வெளிநாட்டுக்கு அனுப்ப வந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவரிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில், அவர் திருச்சி ஜீயபுரம் அருகே உள்ள எட்டரை கோப்பு பகுதியைச் சேர்ந்த நந்தகுமார் (வயது 32) என்பதும் அவர் கொண்டு வந்த பார்சலை பிரித்து சோதனை செய்தபோது அதில் சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான 10 கிலோ எடை கொண்ட போதைப்பொருள் இருந்ததும் தெரிய வந்தது.

இதை தொடர்ந்து அவரை அதிகாரிகள் கைது செய்தனர். மேலும் எட்டரை கோப்பு பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று சோதனை நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து அவரை திருச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தி முசிறி கிளை சிறையில் அடைத்தனர்.

Updated On: 24 Sep 2021 5:00 AM GMT

Related News

Latest News

  1. பட்டுக்கோட்டை
    தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டம் : இணை இயக்குனர் ஆய்வு..!
  2. திருமங்கலம்
    மதுரை அருகே அதிமுக வேட்பாளருக்கு, முன்னாள் அமைச்சர் வாக்கு...
  3. ஈரோடு
    நாடாளுமன்றத் தேர்தலுக்காக ஈரோட்டில் இருந்து 75 சிறப்பு பேருந்துகள்...
  4. லைஃப்ஸ்டைல்
    இனிய கனவு காண, ஒரு இனிய இரவு வணக்கம்..!
  5. கோவை மாநகர்
    கோவையில் தி.மு.க. அரசிற்கு எதிரான ஆய்வறிக்கை வெளியிட்ட அமைப்பு
  6. திருவள்ளூர்
    ஆரணி தொகுதி தே.மு.தி.க. வேட்பாளரை ஆதரித்து ஜெகன் மூர்த்தி பிரச்சாரம்
  7. நாமக்கல்
    நாமக்கல் கூட்டுறவு சங்கத்தில் 1,200 மூட்டை பருத்தி ஏலம் மூலம்
  8. மாதவரம்
    பெண் விவகாரத்தில் பீர் பாட்டிலால் இளைஞரை தாக்கிய மூன்று பேர் கைது
  9. மதுரை மாநகர்
    மதுரையில் வெயிலின் கொடுமையில் இருந்து மக்களை காக்க கட்டுப்பாட்டு அறை
  10. சிங்காநல்லூர்
    கோவை நாடாளுமன்ற தொகுதிக்காக தனி தேர்தல் அறிக்கை வெளியிட்ட தி.மு.க.