/* */

திருச்சி விமான நிலையத்தில் 6 கிலோ தங்கம் சிக்கியது

ஷார்ஜாவில் இருந்து திருச்சி விமானநிலையத்திற்கு கடத்தி வரப்பட்ட 6 கிலோ தங்கம் - புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை.

HIGHLIGHTS

திருச்சி விமான நிலையத்தில்  6 கிலோ தங்கம் சிக்கியது
X

ஷார்ஜாவிலிருந்து கடத்திவரப்பட்ட 6 கிலோ தங்கம் பறிமுதல். பிடிபட்ட 6 பேரிடம் புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி விமான நிலையத்திற்கு வெளிநாட்டில் இருந்து வரும் சிறப்பு விமானங்கள் மற்றும் உள்ளூர் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. ஷார்ஜாவில் இருந்து திருச்சிக்கு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் அதிகளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள், சக பயணிகள் போல திருச்சி ஏர்போர்ட்டில் காத்திருந்தனர். அப்போது ஷார்ஜாவில் இருந்து வந்த விமான பயணிகளை அவர்கள் நோட்டமிட்டு சந்தேகத்திற்கு இடமான 6 பேரை மட்டும் தனியாக அழைத்து சோதனை செய்தனர்.

இந்த சோதனையில் அவர்கள் கடத்தி வந்த 3 கோடி ரூபாய் மதிப்பிலான 6 கிலோ தங்கம் சிக்கியது. இதைத் தொடர்ந்து அவர்களிடம் தங்கம் கடத்தலில் மேலும் யார்? யாருக்கு? தொடர்புள்ளது? என்பது குறித்து விமான நிலைய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 23 Jun 2021 8:50 AM GMT

Related News

Latest News

  1. திருமங்கலம்
    விபத்தில் சிக்கிய மாணவர்கள்: தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் மருத்துவமனை...
  2. உலகம்
    புற்று நோயாளிகளுக்கு முடி வழங்கிய இளவரசி கேட் மிடில்டன்..!
  3. வேலைவாய்ப்பு
    பாங்க் ஆஃப் இந்தியா அலுவலர் பணி: 143 பதவிகளுக்கு விண்ணப்பங்கள்...
  4. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்வு: நான்கு எளிய வழிமுறைகள்
  5. ஆன்மீகம்
    புதிய விடியலுக்கான புனித வெள்ளி..!
  6. லைஃப்ஸ்டைல்
    காலை எழுந்ததும்... வெறும் வயிற்றில் சாப்பிட ஏற்ற 10 உணவுகள்
  7. இந்தியா
    பாஸ்போர்ட் சேவா இணையத்தில் தொழில்நுட்பக் கோளாறு..! பலர் பரிதவிப்பு..!
  8. வீடியோ
    🔴LIVE : திருவள்ளூரில் பாஜக வேட்பாளரை ஆதரித்து அண்ணாமலை வாக்கு...
  9. குமாரபாளையம்
    எதிர்காலத்திற்கான டிஜிட்டல் டைனமோ—ஐசிடி கருவிகள்
  10. இந்தியா
    சுத்திச்சுத்தி அடிவாங்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்..!