/* */

திருச்சி: மதுவுக்கு அடிமையான கூலி தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

மதுவுக்கு அடிமையான கூலித்தொழிலாளி திருச்சியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

HIGHLIGHTS

திருச்சி: மதுவுக்கு அடிமையான கூலி தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
X

தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் தாலுகா வென்னமங்கலம் அருகே உள்ள பூதராக நல்லூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் சண்முகம் (வயது 60). இவர் திருப்பூரில் தங்கி கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் தனது சொந்த ஊருக்கு செல்வதற்காக அங்கிருந்து பஸ்சில் புறப்பட்டவர் திருச்சிக்கு வந்தார். பின்னர் சத்திரம் பஸ் நிலையம் அருகில் உள்ள பூசாரி தெரு, முனிசிபல் காலனி அருகே உள்ள ஒரு மரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவல் அறிந்த கோட்டை போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று இறந்து போன சண்முகத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து சண்முகத்தின் மகன் சிவகுமார் கொடுத்த புகாரின் பேரில் கோட்டை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் சண்முகத்திற்கு மது பழக்கம் உடையதாகவும் மதுவுக்கு அடிமையானதால் அதில் இருந்து மீள முடியாமல் தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரியவந்து உள்ளது.

Updated On: 22 Sep 2021 6:00 PM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  2. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்
  3. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
  4. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  5. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  6. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  7. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  8. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  9. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  10. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!