/* */

தேசிய சிலம்ப போட்டியில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு வரவேற்பு

தேசிய சிலம்ப போட்டியில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு திருச்சி ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

HIGHLIGHTS

தேசிய சிலம்ப போட்டியில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு வரவேற்பு
X

தேசிய சிலம்ப போட்டியில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு திருச்சி ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள சுவர்ண பாரதி உள் விளையாட்டரங்கில் World Union Silambam Federation சார்பில் நடைபெற்ற தேசிய சிலம்பப் போட்டியில் 8 மாநிலங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

இந்த போட்டியில் திருச்சி திறுவெறும்பூர் வேழம் சிலம்பம் மற்றும் தற்காப்பு கலைக்கூடம் சார்பில் பயிற்சியாளர் சந்திரசேகர் தலைமையில் 40 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

இதில் 33 தங்கப்பதக்கங்களும், 23 வெள்ளி பதக்கங்களும், 11 வெண்கலப்பதக்கங்களும் பெற்றனர். குறிப்பாக 15 வயதிற்கு மேற்பட்டோருக்கு மட்டும் நடந்த ஆண்கள் பிரிவில் "போர்வீரன்" எனும் சிறப்பு போட்டியில் திருச்சி பூலாங்குடியை சேர்ந்த முகமது பாசித் எனும் மாணவன் கலந்து கொண்டு 5 நிமிடங்களில் நான்கு ஆயுதங்களை பயன்படுத்தும் போட்டியில் வெற்றி பெற்று "போர்வீரன்" என்னும் பட்டத்தையும் ரூ.15 ஆயிரம் பரிசுத் தொகையும் வென்றுள்ளார்.

வெற்றி பெற்று பதக்கங்களை வென்று வந்த வீரர், வீராங்கனைகளுக்கு திருச்சி ரயில் நிலையத்தில் அவர்களது பெற்றோர்கள், உறவினர்கள் மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Updated On: 25 Oct 2021 3:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உண்மை உறவுகளுக்குள் ஊடலும் இருக்கும்..!?
  2. கல்வி
    பெறும் முன்னரே சுதந்திர பள்ளு பாடிய உணர்ச்சிக்கவி பாரதி..!
  3. டாக்டர் சார்
    பெண்களின் இனப்பெருக்க குறைபாடுகள் என்னென்ன..? எப்படி தவிர்க்கலாம்..?
  4. இந்தியா
    பெங்களூர் வாசிங்களே...மோடியால இன்னிக்கு வரலாறு காணாத டிராபிக்......
  5. திருப்பரங்குன்றம்
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், நாளை திருக்கல்யாணம்..!
  6. இந்தியா
    'இந்தியாவின் எஃகு சட்டகம்' என்பவர் யார் தெரியுமா?
  7. இந்தியா
    கர்நாடக மாணவி கொலை...! என்னதான் ஆச்சு!
  8. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை சமாளிக்க 5 பானங்கள்
  9. உலகம்
    இவ்ளோ நாள் கொரோனாவுடன் வாழ்ந்தாரா..? ஆச்சர்ய மனிதர்..!
  10. கவுண்டம்பாளையம்
    கோவையில் இரண்டாவது முறை வாக்களிக்க முயன்றவர் கைது