மதுரையில் இருந்து திருச்சிக்கு வந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதிக்கு வரவேற்பு
Torch Relay for Olympics - மதுரையில் இருந்து திருச்சிக்கு வந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதிக்கு சிறப்பான வரவேற்பு அளித்து மீண்டும் துவக்கி வைக்கப்பட்டது.
HIGHLIGHTS
Torch Relay for Olympics -சென்னை மாமல்லபுரத்தில் ஜூலை 28ம்தேதி 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்கி நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான விழிப்புணர்வு ஜோதி ஓட்டம் மதுரையில் இருந்து இன்று காலை திருச்சி வந்து சேர்ந்தது. அந்த ஜாதிக்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்த ஜோதியை பெற்றுக்கொண்ட கலெக்டர் பிரதீப்குமார் திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் மீண்டும் ஜோதி ஓட்டத்தினை தொடங்கிவைத்து கையில் ஏந்தியபடி ஓடினார்.
இந்த நிகழ்வில் திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தரபாண்டியன், ஸ்டாலின்குமார், இனிகோ இருதயராஜ், பழனியாண்டி, திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன், துணை கமிஷனர்கள் ஸ்ரீதேவி, அன்பு, மண்டல விளையாட்டு துறை மேலாளர் ராமசுப்பிரமணி, மாவட்ட விளையாட்டு அதிகாரி ஞானசுகந்தி, மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2