/* */

திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம்

திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம் முதல் முறையாக இன்று நடைபெற்றது.

HIGHLIGHTS

திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம்
X

திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க.  பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் மாவட்ட செயலாளரும், அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசினார்.

திருச்சி கீழப்புலிவார்டு சாலையில் உள்ள ஆனந்தா அவென்யூவில் திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. முதல் பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.திருச்சி தெற்கு மாவட்ட கழக அவைத்தலைவர் என்.கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளரும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னிலை வகித்தார்.


விழாவில் தொடக்கமாக கழக கொடியை ஏற்றி வைத்து மாவட்ட கழக நிர்வாகிகளின் வரவேற்பை பெற்றுக் கொண்டார். அதனை தொடர்ந்து பெரியார்,அண்ணா, கருணாநிதி படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:-

பெரியார், அண்ணா, முத்தமிழ் கருணாநிதி ஆகியோரின் இலட்சியங்களை இதயத்தில் ஏற்று திராவிட மாடல் ஆட்சி நடத்தும், திராவிடத்தின் திருவிளக்கு, முகஸ்டாலினை அறிவு இயக்கமாம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக இரண்டாவது முறையாக தேர்ந்தெடுத்த கழகத்தின் பொதுக்குழுவுக்கு திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. தனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறது.

நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர், எங்களது ஒன்றுபட்ட திருச்சி மாவட்டத்தின் செயலாளராக பணியாற்றிய கே.என். நேருவை மீண்டும் முதன்மை செயலாளராக நியமனம் செய்த, தமிழக முதல்வர், கழகத்தலைவருக்கு திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் தெரிவித்துக்கொள்வது.

திருச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளராக, மிகச்சிறப்பாக பணியாற்றிய அன்பில்.மகேஸ் பொய்யாமொழியை திருச்சி தெற்கு மாவட்டக் கழக செயலாளராக தேர்வு செய்த கழகத் தலைவர் அவர்களுக்கும், திருச்சி தெற்கு மாவட்டத்தின் மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் செயலாளர்களுக்கும், நிர்வாகிகளுக்கும். இந்த மாவட்ட கழக செயல்வீரர்கள் கூட்டம், இதயாமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறது.

இளைஞர்களின் எழு ஞாயிறு, தமிழகத்தின் எதிர்காலம், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர். கழகத்தின் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினின், பிறந்த நாளான நவம்பர் 27 அன்று திருச்சி தெற்கு மாவட்டத்தின் மாநகர ஒன்றிய நகர, பகுதி, பேரூர் பகுதிகளில் கழக கொடியினை ஏற்றி, நலத்திட்ட உதவிகளை வழங்கி, சிறப்பாக கொண்டாடுவது என்று இக்கூட்டம் முடிவு செய்கிறது.

2024ல் நடைபெற இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலில் 40க்கு40 தொகுதிகளை வென்றெடுப்போம் என்று, கழகத்தலைவர் பொதுக்குழுவில் பிரகடனம் செய்ததை நிறைவேற்றும் வகையில் திருச்சி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட வாக்குச்சாவடி முகவர்கள், மற்றும் பிஎல்ஏ 2 யும் தலைமைக்கழகத்தின் வழிகாட்டுதலின் படி நியமித்து கழகத்தின் வெற்றிக்கு வழி வகுத்திட பணியாற்றுவோம், வெற்றிபெறுவோம் என்று இக்கூட்டம் உறுதி ஏற்கிறது.

மேற்கண்ட தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

திருச்சி தெற்கு மாவட்ட பொது உறுப்பினர் கூட்டத்தில் திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், கிழக்கு மாநகரச் செயலாளர் மதிவாணன்,, முன்னாள் எம்.எல்.ஏ. கே என் சேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 6 Nov 2022 1:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தமிழக கிராம உணவின் சிறப்புகள்
  2. குமாரபாளையம்
    மழை வேண்டி மழைக்கஞ்சி வழங்க பாட்டுப்பாடி அரிசி தானம் பெற்ற பொதுமக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலிகூட நமக்கான பாடம்தான்..! கற்றுக்கொள்வோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    மூளையை சுறுசுறுப்பாக்குங்கள்: புத்திசாலித்தனமாக செயல்பட 10 வழிகள்
  5. லைஃப்ஸ்டைல்
    இனிய உறவாக தோழனின் தோள் பாதுகாக்கும்..!
  6. இந்தியா
    5ஜி நெட்வொர்க் ஏஐ பயன்பாட்டில் தானியங்கி சேவை: சி-டாட், ஜோத்பூர் ஐஐடி...
  7. கடையநல்லூர்
    கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக-கேரள எல்லையில் மாவட்ட ஆட்சியர்...
  8. லைஃப்ஸ்டைல்
    கோடையில் கூந்தலுக்கு 'கவசம்'
  9. லைஃப்ஸ்டைல்
    இளம் பெண்களே..உங்கள் சருமம் அழகாக இருக்கணுமா? அவசியம் படீங்க..!
  10. தென்காசி
    கள்ள நோட்டு வழக்கில் 6 நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் அதிரடி