/* */

குறைந்தளவு உரம் பயன்படுத்தி விவசாயிகள் அதிக மகசூல் பெறலாம்: கலெக்டர்

உரங்களை குறைந்த அளவு பயன்படுத்தி விவசாயிகள் அதிக மகசூல் பெறலாம் என்று, திருச்சி கலெக்டர் சிவராசு அறிவுறுத்தி இருக்கிறார்.

HIGHLIGHTS

குறைந்தளவு உரம் பயன்படுத்தி விவசாயிகள் அதிக மகசூல் பெறலாம்: கலெக்டர்
X

கலெக்டர் சிவராசு

திருச்சி மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில் 86,250 ஏக்கர் பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டுள்ளன. மேலும் சிறு தானியங்கள் 1,10,000 ஏக்கரும், பருத்தி 24,915 ஏக்கரும், கரும்பு 3,950 ஏக்கரும், எண்ணெய்வித்து பயிர்கள் 20,112 ஏக்கரும், தோட்டக்கலைப்பயிர்கள் 62,500 ஏக்கரும் பயிரிடப்பட்டுள்ளன. இந்த பயிர்களுக்கு தேவையான உரங்கள் அனைத்தும் தனியார் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் இருப்பு வைக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், வடக்கிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் பயிர்களுக்கு உரங்களின் தேவை கணிசமாக உயர்ந்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு திருச்சி மாவட்டத்திற்கு 620 டன் யூரியா ரெயில் மூலம் வந்துள்ளது. இவை, சம்பந்தப்பட்ட தனியார் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு அனுப்பப்பட்டு வினியோகம் செய்யப்பட உள்ளது.

தற்போது நிலவிவரும் சீதோஷ்ண நிலை காரணமாக, தழைச்சத்து உரத்தினை வேளாண்மைத்துறை பரிந்துரைக்கப்படும் அளவுகளில் மட்டும் பயன்படுத்த வேண்டும். மேலும் விவசாயிகள் உரங்களை குறைந்த அளவு மற்றும் சிக்கனமாக பயன்படுத்தி அதிக மகசூல் பெறலாம். இந்த தகவலை திருச்சி மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு தெரிவித்துள்ளார்.

Updated On: 11 Dec 2021 4:00 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    SavukkuShankar கைது சரியா ? நச்சுனு பதில் சொன்ன மக்கள்...
  2. வீடியோ
    🔴LIVE : ஜம்மு காஷ்மீர் விவகாரம் | வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்...
  3. வணிகம்
    இந்தியாவில் அதிகரிக்கும் சீன மொபைல் போன் விற்பனை
  4. வீடியோ
    Director Praveen Gandhi-க்கு Vetrimaaran பதிலடி ! #vetrimaaran...
  5. வீடியோ
    Kalaignar, MGR வரலாற்றை சொல்லி கொடுத்து மாணவர்களை கெடுத்துவிட்டனர்...
  6. லைஃப்ஸ்டைல்
    கடிதத்தை தூதுவிட்டு என்னுயிர் மனைவிக்கு திருமண வாழ்த்து..!
  7. வால்பாறை
    ஆனைமலை மாசாணியம்மன் கோவில் நகைகள் உருக்கும் பணிகள் துவக்கம்
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    இந்திய ரூபாய் நோட்டுக்களில் நட்சத்திரம் சின்னம் இருப்பது ஏன்
  9. கரூர்
    கரூர் மாரியம்மன் கோவில் கம்பம் விடும் திருவிழா பற்றிய ஆலோசனை கூட்டம்
  10. லைஃப்ஸ்டைல்
    ஈடற்ற அண்ணனுக்கு திருமணநாள் வாழ்த்துகள்