/* */

திருச்சி பொன்மலையில் சதர்ன் ரயில்வே பென்சனர்ஸ் சங்க பொதுக்குழு கூட்டம்

திருச்சி பொன்மலையில் சதர்ன் ரயில்வே பென்சனர்ஸ் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

திருச்சி பொன்மலையில் சதர்ன் ரயில்வே பென்சனர்ஸ் சங்க பொதுக்குழு கூட்டம்
X

திருச்சி பொன்மலையில் சதர்ன்ரயில்வே பென்சனர்ஸ் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

பொன்மலை சதர்ன் இரயில்வே பென்ஷனர்ஸ்' சங்கத்தின் 38-ஆவது ஆண்டுவிழா மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று பொன்மலை டாக்டர் அம்பேத்கார் கல்யாண மண்டபத்தில் சங்கத்தலைவர் கோபாலன். செயல்தலைவர் கணேஷ் ஆகியோர் தலைமையில் நடந்தது.

செயலாளர் இராமசுவாமி, பொருளாளர் மகேந்திரன், துணைத் தலைவர்கள் சுந்தரேஷன்,ரெங்கசாமி, இணைச் செயலாளர்கள் கோபாலகிருஷ்ணன் , பழனிவேல்.உதவி செயலர்கள் ரவிச்சந்திரன் சம்பந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பொன்மலை இரயில்வே பணிமனையின் முதன்மைப் பணிமனை மேலாளர் ஷ்யாமாதார் ராம் சிறப்புரையாற்றினார். பொன்மலை ரயில்வே முதன்மை மருத்துவமனை அதிகாரி டாக்டர் சௌந்திரராஜன்,முன்னாள் பொன்மலை ரயில்வே முதன்மை பணிமனை மேலாளர் ராஜு , இந்தியன் வங்கி மேலாளர்கள், மற்றும் ரயில்வே அதிகாரிகள் வாழ்த்துரை வழங்கினார்கள்.

இந்த கூட்டத்தில் 7-ஆவது சம்பள கமிஷன் சிபாரிசின்படி வழங்கப்பட்ட குறைந்தபட்ச சம்பளத்தை ரூ.18,000/-இல் இருந்து ரூ.26,000/-ஆகவும் குறைந்தபட்ச பென்ஷனை ரூ.13,000/- ஆகவும் திருத்தி அமைத்திட மத்திய அரசை வேண்டுகிறோம். Pre-2006 பென்ஷனர்களுக்கு Higher Replacement Scale அமல் செய்ததுபோல் 01-01-1996-க்கு முன்பு ஓய்வு பெற்றவர்களுக்கு Higher Replacement Scale அமல் செய்ய வேண்டுகிறோம். AIFPA-சென்னை பெடரேஷனை SCOVA மெம்பராக நிரந்தரமாக நியமிக்க வேண்டுகிறோம். 7-ஆவது சம்பளக் கமிஷன்படி FMA-வை பரிசீலிக்க அமைக்கப்பட்ட கமிட்டியில். இரயில்வே பென்ஷனர்களுக்கு FMA-வை ரூ.3000/- ஆக உயர்த்தவும் 22 கி.மீ. அப்பால் குடியிருக்கும் அனைத்து பென்ஷனர்களுக்கும் எவ்வித நிபந்தனையுமின்றி FMA வழங்க சிபாரிசு செய்யும்படியும் வேண்டுகிறோம். RELHS-இல் OPD வேண்டுமா? FMA வேண்டுமா? என்று விருப்பத்தைத் தெரிவிக்க எந்த நிபந்தனையுமின்றி விருப்பத்தை மாற்றி தெரிவிக்க அனுமதிக்க வேண்டுகிறோம், வீட்டு வாடகை அலவன்ஸாக அடிப்படை பென்ஷனில் 40% தொகையை பென்ஷனர்களுக்கு வழங்க வேண்டுகிறோம்.

பென்ஷனர்கள் இறந்துவிட்டால் அவர்களின் ஈமச்சடங்கிற்காக ஒரு மாத பென்ஷனுக்கு இணையானத் தொகையினை வழங்க வேண்டுகிறோம், இரயில்வே பென்ஷன் பெறும் முதியோர்களுக்கு 'தங்கும் விடுதிகளை' ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசே நிறுவி அதனை நடத்திட மத்திய அரசை வேண்டுகிறோம், இரயில்வே பென்ஷனர்களுக்கும் 'Festival Advance' வழங்க வேண்டுகிறோம், தமிழக அரசு வழங்கிவரும் 'சமூக பாதுகாப்புத் திட்டம்' போல் மத்திய அரசு பென்ஷனர்களுக்கும் இதுபோன்ற ஓர் உதவித்திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசை வேண்டுகிறோம் என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஈரோடு, திண்டுக்கல், சென்னை. தஞ்சாவூர். மயிலாடுதுறை, திருச்சி ஆகிய இடங்களிலிருந்து வந்துள்ள சங்கங்களின் நிர்வாகிகள், வங்கி மேலாளர்கள், ஓய்வூதிய சங்க உறுப்பினர்கள், பெரியோர்கள் மற்றும் தாய்மார்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். வந்தவர்களை சங்க செயலாளர் பி.இராமசுவாமி வரவேற்றார். முடிவில் செயல் தலைவர் டி.எஸ்.கணேஷ் நன்றி கூறினார்.

Updated On: 8 Aug 2022 11:20 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    துக்கம் என்று வந்துவிட்டால், அக்கா வந்து முதலில் நிற்பாள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    பெண்களின் அழகுக்கு அழகு சேர்க்கும் பாரம்பரிய ஆபரணங்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பிரகாசமாக மின்னுவதற்கான இயற்கை வழிகள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  4. நாமக்கல்
    கோடைக்காலத்தில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள்: 30ம் தேதி இலவச...
  5. நாமக்கல்
    வெளிமாநில தொழிலாளர்களுக்கு தேர்தல் அன்று சம்பளத்துடன் விடுமுறை ..!
  6. லைஃப்ஸ்டைல்
    ருசியான கருவாட்டு குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    பாட்டி, நீங்கள் ஊட்டியது "பூவா" அல்ல, பாசம்..!
  8. ஈரோடு
    மழை பெய்ய வேண்டி ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில் சிறப்பு வழிபாடு
  9. நாமக்கல்
    கூட்டுறவு மேலாண்மை டிப்ளமோ பயிற்சிக்கு 29ம் தேதி முன்பதிவு துவக்கம்
  10. லைஃப்ஸ்டைல்
    ‘நீ பாதி நான் பாதி கண்ணே, அருகில் நீ இன்றி தூங்காது கண்ணே’