/* */

திருச்சி எடமலைப்பட்டிபுதூரில் கள்ள சந்தையில் மது விற்ற இருவர் கைது

திருச்சி எடமலைப்பட்டி புதூரில் கள்ள சந்தையில் மது விற்ற இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

HIGHLIGHTS

திருச்சி எடமலைப்பட்டிபுதூரில்  கள்ள சந்தையில் மது விற்ற இருவர் கைது
X

பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்கள்

திருச்சி எடமலைப்பட்டி புதூர் போலீசார் தங்களது எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எடமலைப்பட்டி புதூரில் உள்ள முருகன் கோவில் அருகே டாஸ்மாக் கடையில் வாங்கிய மது பாட்டில்களை அதிக விலைக்கு கள்ள சந்தையில் விற்பனை செய்தது தெரியவந்தது. இதனை கண்ட போலீசார் மது பாட்டில்களை விற்பனை செய்தவர்களை கையும் களவுமாக மடக்கி பிடித்தனர்.

பின்னர் விசாரணை செய்ததில் அவர்கள் நேதாஜி நகரை சேர்ந்த செந்தில் முருகன் (வயது 38), கிருஷ்ணா புரத்தை சேர்ந்த பாலை என்கிற இளமாறன் (வயது 54) என்பது தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, அவர்களிடம் இருந்து 94 குவாட்டர் மது பாட்டில்களை பறிமுதல் செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Updated On: 14 Oct 2021 12:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலிகூட நமக்கான பாடம்தான்..! கற்றுக்கொள்வோம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    மூளையை சுறுசுறுப்பாக்குங்கள்: புத்திசாலித்தனமாக செயல்பட 10 வழிகள்
  3. லைஃப்ஸ்டைல்
    இனிய உறவாக தோழனின் தோள் பாதுகாக்கும்..!
  4. இந்தியா
    5ஜி நெட்வொர்க் ஏஐ பயன்பாட்டில் தானியங்கி சேவை: சி-டாட், ஜோத்பூர் ஐஐடி...
  5. கடையநல்லூர்
    கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக-கேரள எல்லையில் மாவட்ட ஆட்சியர்...
  6. லைஃப்ஸ்டைல்
    கோடையில் கூந்தலுக்கு 'கவசம்'
  7. லைஃப்ஸ்டைல்
    இளம் பெண்களே..உங்கள் சருமம் அழகாக இருக்கணுமா? அவசியம் படீங்க..!
  8. தென்காசி
    கள்ள நோட்டு வழக்கில் 6 நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் அதிரடி
  9. கல்வி
    அறிவை விளைவிக்கும் எழுத்து வயல், புத்தகங்கள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு மருத்துவ பரிசோதனை ஏன் அவசியம்..?