/* */

திருச்சியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற டீ கடைக்கு சீல்

திருச்சியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற உணவு விடுதிக்கு அதிகாரிகள் இன்று சீல் வைத்தனர்.

HIGHLIGHTS

திருச்சியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற டீ கடைக்கு சீல்
X

திருச்சியில் குட்கா விற்ற டீ கடைக்கு சீல் வைக்கப்பட்டது.

திருச்சி ஸ்ரீரங்கம், காந்தி ரோடு பகுதியில் இயங்கிவந்த ஸ்ரீ நாகநாதர் டீ ஸ்டால் கடையில் தொடர்ந்து தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பான் மசாலா, குட்கா போன்ற புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டது.

மேலும் கடந்த 26.03.2021 அன்று முதல் ஆய்வில் அவரது கடையில் தமிழக அரசால்தடைசெய்யப்பட்ட பான்மசாலா, குட்கா போன்ற புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது அறிந்து ரூ.5000/- அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், அவர்கள் தொடர்ந்து விற்பனை செய்வது கண்டறியப்பட்டு மீண்டும் 11.02.2022 அன்று ஆய்வில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டு மீண்டும் ரூ.10,000/- அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும், அன்றைய தினமான 11.02.2022 அன்று அவசர தடையாணை அறிவிப்பு வழங்கப்பட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக சென்னை, உணவு பாதுகாப்பு ஆணையர் செந்தில்குமார் இன்று 23.02.2022-ல் அவசர தடையாணை உத்தரவு வழங்கியதன் அடிப்படையில் அந்த டீ கடைக்கு இன்று சீல் வைக்கப்பட்டது.

இது குறித்து மாவட்ட நியமன அலுவலர் டாக்டர்ரமேஷ்பாபு கூறுகையில், திருச்சி மாவட்டத்தில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்து தொடர் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் 2006-ன் படி நடவடிக்கை எடுக்கப்பட்டு அந்த கடை சீல் செய்யப்படும் என்றார்.

இந்த நிகழ்வில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஸ்டாலின், பாண்டி, மகாதேவன், அன்புச்செல்வன், வசந்தன் மற்றும் ஜஸ்டின் ஆகியோர் உடனிருந்தனர்.

Updated On: 23 Feb 2022 3:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘என்றாவது ஒரு நாள், நான் இல்லாமல் போவேன்’ - மனிதர்களுக்கு மரணம்...
  2. லைஃப்ஸ்டைல்
    எமை ஈன்றெடுத்த தாய்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்து..!
  3. லைஃப்ஸ்டைல்
    பாசத்துடன் பண்பினை புகட்டிய தாத்தா..!
  4. லைஃப்ஸ்டைல்
    ஈடு செய்ய இயலாத இழப்பின் கொடூரம் - மரணத்தின் வலிகள் குறித்த...
  5. லைஃப்ஸ்டைல்
    நாம் வணங்கும் நேர் கண்ட தெய்வம், அப்பா..!
  6. கோவை மாநகர்
    கோவையில் ஒரு இலட்சம் பெயர்கள் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து...
  7. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் மாலை 5 மணி நிலவரம்: 71.44 சதவீதம்...
  8. கவுண்டம்பாளையம்
    கவுண்டம்பாளையம் பகுதியில் 830 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதாக...
  9. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் காலைநேரத்து காபியும் ஒரு நம்பிக்கை விதையும்..!
  10. ஈரோடு
    ஈரோடு தொகுதியில் மாலை 5 மணி நிலவரப்படி 64.50 சதவீதம் வாக்குப்பதிவு