/* */

திருச்சி விமான நிலையத்தில் பெண்ணிடம் ரூ.7.30 லட்சம் அமெரிக்க டாலர் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் கும்பகோணம் பெண்ணிடம் ரூ.7.30 லட்சம் அமெரிக்க டாலர் பறிமுதல் செய்யப்பட்டது.

HIGHLIGHTS

திருச்சி விமான நிலையத்தில் பெண்ணிடம் ரூ.7.30 லட்சம் அமெரிக்க டாலர் பறிமுதல்
X

பைல் படம்.

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர், மலேசியா, துபாய், சார்ஜா, அபுதாபி, இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும், இதே போல் சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், திருப்பதி போன்ற நகரங்களுக்கும் உள்நாட்டு சேவையாகவும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் திருச்சியில் இருந்து சார்ஜாவுக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று நேற்று புறப்பட்டது. முன்னதாக அதில் சென்ற பயணிகளின் ஆவணங்களை இமிகிரேசன் அதிகாரிகளும், உடமைகளை வான் நுண்ணறிவு சுங்க அதிகாரிகளும் சோதனையிட்டனர்.

அப்போது ஒரு பெண் பயணியின் பேக்கில் ஏராளமான அமெரிக்க டாலர்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவற்றின் இந்திய மதிப்பு ரூ.7.30 லட்சமாகும். இது தொடர்பாக சுங்க அதிகாரிகள் அந்த பெண் பயணியிடம் நடத்திய விசாரணையில், தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள தேப்பெருமாநல்லூரை சேர்ந்த தாஜுதீன் மனைவி நூர்ஜகான் (வயது 28) என்பது தெரியவந்தது.

இதையடுத்து அந்த பெண்ணிடமிருந்த வெளிநாட்டு கரன்சிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தப்பட்டது.

Updated On: 19 Jan 2022 4:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  3. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்
  4. லைஃப்ஸ்டைல்
    முடங்கிக்கிடந்தால் சிலந்திக்கூட சிறை பிடிக்கும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    அப்பா மகள் மேற்கோள்கள்: பாசத்தை வெளிப்படுத்தும் வார்த்தைகள்
  6. லைஃப்ஸ்டைல்
    சிறந்த நண்பர் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  7. அரசியல்
    என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?
  8. அரசியல்
    “அ.தி.மு.க முகாமில் என்ன நடக்கிறது?”
  9. பூந்தமல்லி
    இளம்பெண் சாவில் மர்மம் : காவல் நிலைய வாயிலில் உறவினர்கள் தர்ணா..!
  10. தேனி
    கைவிட்ட தனியார் நிறுவனம் : பாஜவில் ஒரே புலம்பல்..!