/* */

ரூ.4.50 கோடியில் புதிய மேல்நிலை நீர் தேக்கத்தொட்டி: அமைச்சர் கே.என்.நேரு அடிக்கல்

புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டி; ரூ.4.50 கோடியே செலவில் கட்ட அமைச்சர் கே.என்.நேரு அடிக்கால் நாட்டி தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

ரூ.4.50 கோடியில் புதிய மேல்நிலை நீர் தேக்கத்தொட்டி: அமைச்சர் கே.என்.நேரு அடிக்கல்
X

திருச்சி பிராட்டியூர், ராம்ஜி நகர், கருமண்டபம், எடமலைப்பட்டிபுதூர் ஆகிய பகுதிகளுக்காக புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. ரூ.4 கோடியே 50 லட்சம் செலவில் கட்டப்படவிருக்கும் இதற்கான பணியினை இன்று அடிக்கல் நாட்டி நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.

விழாவிற்கு பின்னர் அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களிடம் கூறுகையில், நகர் புற உள்ளாட்சி தேர்தலை விரைவில் நடத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். எனவே அதற்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி உள்ளது. அதன் தொடக்கமாக தான் 19 நகராட்சி, கும்பகோணம் மாநகராட்சி அரசாணை வெயிடப்பட்டு உள்ளது.

தமிழக தேர்தல் ஆணையத்துடன் பேசி அவர்கள் அறிவிக்கும் தேதியில் தேர்தல் நடக்கும். திமுக ஆட்சியில் தேர்தல் அதிகாரிகள் மிக நேர்மையாக நடந்து கொண்டுள்ளனர். ஒரு வாக்கு, 4 வாக்கு வித்தியாசத்தில் எல்லாம் திமுகவினர் தோல்வியை தழுவி உள்ளனர். நேர்மையாக நடத்தியதால்தான் இது நடைபெற்றுள்ளது.

தோல்விக்கான காரணத்தை தேடி அதிமுகவினர் சொல்லி கொண்டிருக்கிறார்கள். காவிரி பாலம், திருச்சி மாநகரில் உயர்மட்ட பாலம் கட்டுவதற்கான திட்ட அறிக்கை தயாராகி கொண்டிருக்கிறது. ஒருங்கிணைந்த பஸ் நிலையம் கட்டுவதற்கான நிர்வாக ஒப்புதல் கிடைத்து விட்டது. அதற்காக 140 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. புதிய மார்க்கெட்டுக்கான நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த பணிகள் அனைத்தும் விரைவில் தொடங்கும். கோயில் திறக்க முதல்வர் முடிவு செய்துள்ளதை தெரிந்து கொண்டு பிஜேபி போராட்டம் நடத்தியது என்று அவர் கூறினார்.

Updated On: 16 Oct 2021 10:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காதல், சர்வதேச பொதுமொழி..! ஆயினும் அது புதுமொழி..!
  2. லைஃப்ஸ்டைல்
    துக்கம் என்று வந்துவிட்டால், அக்கா வந்து முதலில் நிற்பாள்..!
  3. ஈரோடு
    ஈரோடு திமுக வேட்பாளர், தமிழக முதல்வர் சந்திப்பு!
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களின் அழகுக்கு அழகு சேர்க்கும் பாரம்பரிய ஆபரணங்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    முகம் பிரகாசமாக மின்னுவதற்கான இயற்கை வழிகள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  6. நாமக்கல்
    கோடைக்காலத்தில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள்: 30ம் தேதி இலவச...
  7. நாமக்கல்
    வெளிமாநில தொழிலாளர்களுக்கு தேர்தல் அன்று சம்பளத்துடன் விடுமுறை ..!
  8. லைஃப்ஸ்டைல்
    ருசியான கருவாட்டு குழம்பு செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    பாட்டி, நீங்கள் ஊட்டியது "பூவா" அல்ல, பாசம்..!
  10. ஈரோடு
    மழை பெய்ய வேண்டி ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில் சிறப்பு வழிபாடு