/* */

பருப்பு மீதான 5 சதவீத வரியை ரத்து செய்ய முதல்வருக்கு கோரிக்கை

பருப்பு மீதான 5 சதவீத வரியை ரத்து செய்ய முதல்வருக்கு திருச்சி மாவட்ட வியாபார கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.

HIGHLIGHTS

பருப்பு மீதான 5 சதவீத வரியை ரத்து செய்ய முதல்வருக்கு கோரிக்கை
X

திருச்சி மாவட்ட வியாபார கழகத்தின் செயலாளர் எம். தங்கராஜ் தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு அனுப்பியுள்ள ஒரு கோரிக்கை மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:-

சமீபத்தில் நடந்த ஜி.எஸ்.டி. 47 வது கவுன்சில் கூட்டத்தில் பருப்பு வகைகளுக்கு குறிப்பாக அரிசி, பருப்பு, கோதுமை ஆகியவற்றிற்கு 5 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. மக்களின் அன்றாட உணவுகளில் முக்கிய இடத்தை பிடிக்கும் பருப்பு வகைகளுக்கு 5 சதவீத வரி விதிக்கப்பட்டு இருப்பதால் அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை கடுமையாக உயரும். இதனால் ஏழை எளிய நடுத்தர வர்க்க மக்கள் மிகவும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். ஆதலால் இந்த வரியை ரத்து செய்து பருப்பை மீண்டும் விரி விலக்கு பொருட்களுக்கான பட்டியலில் சேர்க்க உத்தரவிடும்படி கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 1 July 2022 2:47 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்