/* */

திருச்சியில் நடந்த மத நல்லிணக்க தீபத்திருநாள் விழா

திருச்சியில் மத நல்லிணக்க தீபத் திருநாள் விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

திருச்சியில் நடந்த மத நல்லிணக்க தீபத்திருநாள் விழா
X

திருச்சியில் மத நல்லிணக்க  தீபாவளி பண்டிகை  கொண்டாடப்பட்டது.

திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள சுந்தர்ராஜ் நகர், ஹைவேஸ் காலனி, காவேரி நகர் குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில் நல்லிணக்க தீபத் திருநாள் நகராட்சி பூங்கா அருகில் கொண்டாடப்பட்டது. முன்னாள் துணை கலெக்டர் சத்தியவாகீஸ்வரன் தலைமை தாங்கினார்.

இவ்விழாவில் சுந்தர்ராஜ் நகர் சுந்தர விநாயகர் கோவில் குருக்கள் ராஜ்குமார் மற்றும் கார்த்திகேயன் ஆகியோருக்கு திருச்சி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை துணைத்தலைவர் மௌல்வி அப்துல் ரஹீம், சலாஹிய பள்ளிவாசல் ஜமாத் உறுப்பினர் முன்னாள் பேராசிரியர் முஹம்மது காசிம் ஆகியோர் பொன்னாடை அணிவித்து தீபாவளி வாழ்த்து கூறினர்.

விழாவில் முன்னாள் சுகாதாரத்துறை அதிகாரி உத்தமன், கிறிஸ்தவ பிரமுகர் சார்லஸ், சலாஹியா பள்ளிவாசல் ஜமாத் உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டு தீபாவளி வாழ்த்து கூறினர்.

மத வேற்றுமைகளை மறந்து நாட்டின் முன்னேற்றத்திற்காக அனைவரும் ஒற்றுமையுடன் பாடுபட உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். நகர் நலச்சங்க செயலாளர் செந்தில்குமார் நன்றி கூறினார்.

Updated On: 6 Nov 2021 5:48 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!