/* */

திருச்சியில் போலி பாஸ்போர்ட் வைத்திருந்தவர் கைது

போலி பாஸ்போர்ட் வைத்திருந்ததாக துபாயிலிருந்து திருச்சிக்கு திருப்பி அனுப்பட்டவர் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

திருச்சியில் போலி பாஸ்போர்ட் வைத்திருந்தவர் கைது
X

மயிலாடுதுறை வட்டம் திருவழுந்தூர் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ்(வயது 36). இவர் கடந்த 16-ந் தேதி ஏர் இந்தியா விமானத்தில் திருச்சியில் இருந்து துபாய்க்கு இந்திய பாஸ்போர்ட் மூலம் பயணம் செய்துள்ளார். அங்கு விமான நிலைய குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் பிரகாசின் உடைமைகளை சோதனை செய்ததில், அவர் ஸ்பெயின் நாட்டின் பாஸ்போர்ட்டை வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவர் வைத்திருந்த ஸ்பெயின் நாட்டு பாஸ்போர்ட்டை தணிக்கை செய்த துபாய் விமான நிலைய குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் பிரகாசின் போலியான ஸ்பெயின் நாட்டு பாஸ்போர்ட்டை வாங்கிக்கொண்டு, அவரை துபாயில் அனுமதிக்காமல், திருச்சியில் இருந்து பயணம் செய்த அதே ஏர் இந்தியா விமானத்தில் நேற்று அவரை திருச்சிக்கு திருப்பி அனுப்பினர்.

இதனைத் தொடர்ந்து திருச்சி விமான நிலைய குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் நடத்திய விசாரணையில், பிரகாஷ் ஸ்பெயின் நாட்டுக்கு செல்வதற்காக போலியாக ஏஜென்ட் மூலம் வெளிநாட்டு பாஸ்போர்ட் பெற்றிருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து பிரகாசை கைது செய்த ஏர்போர்ட் போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 21 Jan 2022 5:00 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    29 பேர் சுட்டுக் கொலை...!சத்தீஸ்கரில் நடந்தது என்ன?
  2. லைஃப்ஸ்டைல்
    கடும் வெயிலை எதிர்கொள்வது எப்படி? எளிமையான டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    காதலெனும் காய் கனியானால்...இனிமைதான் போங்கோ..!
  4. சினிமா
    எம்ஜிஆருக்கு ரொம்ப பிடித்தமான உணவு எதுன்னு தெரியுமா?
  5. தேனி
    சூரிய பகவானின் கருணை : வெள்ளரி பிஞ்சு கிலோ ரூ.200 ஆனது..!
  6. கோவை மாநகர்
    தண்டு மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா ; அக்னிசட்டி எடுத்து...
  7. கோவை மாநகர்
    சொத்தை வாங்கிக் கொண்டு தந்தையை விரட்டியடித்த மகன்: நியாயம் வேண்டி...
  8. லைஃப்ஸ்டைல்
    வாழ்வின் வெற்றிக்கு வழிகாட்டும் அப்துல் கலாம் அவர்களின் பொன்மொழிகள்
  9. கவுண்டம்பாளையம்
    சிறுபான்மையினரை வாக்கு வங்கியாக மட்டுமே கருதும் காங்கிரஸ் : தமிழிசை
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலி: சிந்தனையைத் தூண்டும் சிறந்த மேற்கோள்கள்