மழைக்காக பாடங்களை குறைக்க தேவையில்லை- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
மழைக்காக பாடங்களை குறைக்க தேவையில்லை என்று பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.
HIGHLIGHTS
தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும் எம்.எல்.ஏ.வுமானஉதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மன்னார்புரத்தில் உள்ள விழியிழந்த மகளிர் மறுவாழ்வு மையத்தில் நலத்திட்ட உதவிகளை பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார். இந்நிகழ்ச்சியினை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வெங்கடேஷ் குமார் ஏற்பாடு செய்திருந்தார்
இந்நிகழ்வில் மாவட்ட துணை அமைப்பாளர்கள் பாலமுருகன், தேசிங்குராஜா சக்திபிரகாஷ், ரவீந்திரன் விஷ்ணுவரதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஏற்கனவே பள்ளி மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளது.மழை பாதிப்பால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு வரும் நிலையில்,இனியும் மாணவர்களுக்கு பாடத்திட்டங்களை குறைக்க வேண்டிய அவசியமில்லை.மழை பாதிப்பு குறைந்த பின்பு பள்ளிகளில் கூடுதல் வகுப்புகள் வைத்து பாடங்கள் முடிக்கப்படும். தனியார் பள்ளிகளுக்கு 3 வருடத்திற்கு ஒருமுறை உரிமம் புதுப்பிக்கப்படுவது வழக்கமான நடைமுறைதான் இந்த நடைமுறையே தொடரும் என்றார்.