/* */

திருச்சியில் பெண்ணை கொடுமைப்படுத்திய 2-வது கணவர் மீது போலீஸ் வழக்கு

திருச்சியில் பெண்ணை கொடுமைப்படுத்திய 2-வது கணவர் மீது அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

HIGHLIGHTS

திருச்சியில் பெண்ணை கொடுமைப்படுத்திய 2-வது கணவர் மீது போலீஸ் வழக்கு
X

திருச்சி கே.கே.நகர் கே.சாத்தனூர் கலிங்கநகர் பகுதியை சேர்ந்தவர் ஹேமலதா (வயது 32). இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர். முதல் கணவரை விவாகரத்து செய்த இவர் தனது தாயார் வீட்டில் வசித்து வந்தார். பின்னர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கார்த்திக்ராஜா என்பவரை ஹேமலதா 2-ஆவதாக திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பிறகு அவரிடம் இருந்து 20 பவுன் நகைகளை பெற்றுக்கொண்ட கார்த்திக்ராஜா, வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

இதுபற்றி ஹேமலதா கேட்டபோது, ஆபாச வார்த்தைகளால் திட்டியதுடன், அவரை மனதளவிலும், உடலளவிலும் கொடுமைப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து ஹேமலதா கொடுத்த புகாரின் பேரில் திருச்சி கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தவேதவல்லி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Updated On: 9 Dec 2021 9:16 AM GMT

Related News

Latest News

  1. காஞ்சிபுரம்
    தனியார் மருத்துவமனையில் கிராமப்புற ஐ சி யு சேவை: துவக்கி வைத்த...
  2. ஈரோடு
    சித்தோடு ஸ்ரீ வாசவி கல்லூரியில் 57-வது ஆண்டு விழா கொண்டாட்டம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் 100 சதவீத வாக்குபதிவு வலியுறுத்தி விழிப்புணர்வு...
  4. உத்திரமேரூர்
    காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் 15 வேட்பு மனுக்கள் ஏற்பு
  5. காஞ்சிபுரம்
    சின்னம் பெறுவதில் சில கட்சிகளுக்கு சிக்கல் ஏன்? ஜி.கே. வாசன் விளக்கம்
  6. டாக்டர் சார்
    கோடையை குளிர்விக்கும் சப்ஜா..! சத்துகளின் .களஞ்சியம்.!
  7. கீழ்பெண்ணாத்தூர்‎
    திருவண்ணாமலை லோக்சபா தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பாதுகாப்பு
  8. செய்யாறு
    செய்யாறு அருகே கல்குவாரிகள் மீது நடவடிக்கை கோரி பொதுமக்கள் சாலை
  9. நாமக்கல்
    மோகனூர் சோதனைச் சாவடியில் தேர்தல் போலீஸ் பார்வையாளர் திடீர் ஆய்வு
  10. நாமக்கல்
    லோக்சபா தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவு வலியுறுத்தி விழிப்புணர்வு...