Begin typing your search above and press return to search.
அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார் அமைச்சர் அன்பில் மகேஷ்
அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சான்றிதழ் வழங்கினார்.
HIGHLIGHTS
தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் திருச்சி மாவட்டத்திற்குட்பட்ட பள்ளிகளில் 10, 12ம் வகுப்பு பொது தேர்வுகளில் முதல் இடம் பிடித்த மாணவ, மாணவிகளை பாராட்டி சான்றிதழ் வழங்கினார். அனைத்து கல்வி மாவட்டங்களுக்கும் உட்பட்ட பள்ளிகளில் ஒவ்வொரு பாடங்களிலும் முதல் இடம் பிடித்த மாணவ மாணவிகளையும் உறுதுணையாக இருந்த ஆசிரியப் பெருமக்களையும், தலைமை ஆசிரியர்களையும் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.