Begin typing your search above and press return to search.
உ.பி.க்கு அனுப்ப தயாராகிறது வாக்குப்பதிவு எந்திரம் மற்றும் கருவிகள்
உ.பி.க்கு அனுப்புவதற்காக திருச்சி மின்னணு வாக்குப்பதிவு எந்திர கிடங்கு திறக்கப்பட்டு கருவிகள் எடுக்கப்பட்டன.
HIGHLIGHTS
திருச்சி மாவட்டத்தில் கடந்த சட்டமன்ற பொது தேர்தலின் போது பயன்படுத்தப்படாத வாக்குப்பதிவு எந்திரங்களின் கட்டுப்பாட்டு இயந்திரம் 870ம், யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்து கொள்ளும் விவிபெட் இயந்திரம் 1090ம், திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கிட்டங்கியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன.
இன்று காலை இந்த கிட்டங்கி மாவட்ட கலெக்டர் சிவராசு மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் திறக்கப்பட்டது. உத்தரபிரதேச மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருப்பதால் அங்கு தேர்தல் பணிக்காக இந்த கட்டுப்பாட்டு எந்திரங்களும், விவிபேட் கருவிகளும் அனுப்பி வைக்கப்பட உள்ளன. அதற்காக இன்று இந்த அறையைத் திறந்து அனுப்பி வைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.