Begin typing your search above and press return to search.
பாரதிதாசன் பல்கலைக்கழக செனட் உறுப்பினராக வழக்கறிஞர் கண்ணன் நியமனம்
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக செனட் உறுப்பினராக வழக்கறிஞர் எஸ்.கண்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
HIGHLIGHTS
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் செனட் உறுப்பினராக திருச்சியை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் எஸ். கண்ணன் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இவர் இந்த பதவியில் 3 ஆண்டுகாலம் இருப்பார். தமிழக கவர்னரும், பல்கலைக்கழகங்களின் வேந்தருமான ஆர்.என். ரவி இதற்கான நியமன உத்தரவை பிறப்பித்து உள்ளார். வழக்கறிஞர் கண்ணன் திருச்சி காஜாமலை நேரு நகர் முதலாவது தெருவை சேர்ந்த ஓய்வு பெற்ற தாசில்தார் மற்றும் தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்கத்தின் முன்னாள் மாநில தலைவர் எஸ். சுடலையாண்டியின் மகன் ஆவார்.