/* */

திருச்சி மாவட்டத்தில் உடும்பு, கொக்குகளை வேட்டையாடிய 2 பேர் கைது

திருச்சி மாவட்டத்தில் உடும்பு, கொக்குகளை நாட்டு துப்பாக்கி மூலம் வேட்டையாடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

திருச்சி மாவட்டத்தில் உடும்பு, கொக்குகளை வேட்டையாடிய 2 பேர் கைது
X

திருச்சி மண்டல தலைமை வனப்பாதுகாவலர் என்.சதீஸ் உத்தரவின் பேரில், மாவட்ட வன அலுவலர் கிரண் மேற்பார்வையில் திருச்சி வனச்சரகத்துக்கு உட்பட்ட ஓமாந்தூர் காப்புக்காடு பகுதியில் உதவி வன பாதுகாவலர் என்.வி.நாகையா தலைமையிலான தனிப்படையினர் ரோந்து சுற்றி வந்தனர்.

அப்போது, திருப்பைஞ்சீலி வழியாக மூவாரம்பாளையம் செல்லும் சாலையில் உடும்பு மற்றும் கொக்குகளை நாட்டு துப்பாக்கியால் சுட்டு 2 பேர் வேட்டையாடிக் கொண்டிருந்தனர். அவர்களை வனத்துறையினர் பிடித்து திருச்சி வனச்சரக அலுவலர் ஆர்.ரவிகிருஷ்ணனிடம் ஒப்படைத்தனர்.

விசாரணையில் அவர்கள் நம்பர் 1 டோல்கேட் நரிக்குறவர் தோப்பை சேர்ந்த ராஜா (வயது 65), குமரேசன் (வயது 25) என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 2 பேரையும் கைது செய்த வனத்துறையினர் அவர்களிடம் இருந்து நாட்டுத்துப்பாக்கி மற்றும் வேட்டையாடி கொல்லப்பட்ட உடும்பு, கொக்கு உள்ளிட்ட பறவைகள் ஆகியவற்றை கைப்பற்றினார்கள். மேலும் 2 பேரும் முசிறி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு லால்குடி சிறையில் அடைக்கப்பட்டனர்.

Updated On: 17 Nov 2021 8:43 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. ஈரோடு
    கோபிசெட்டிபாளையத்தில் 29ம் தேதி வருங்கால வைப்புநிதி குறைதீர் கூட்டம்
  6. ஈரோடு
    அந்தியூர் அருகே கோவிலில் வெள்ளிக் குடம் திருடியவர் கைது
  7. திருவண்ணாமலை
    வேடந்தவாடி கூத்தாண்டவர் கோயில் அழகிப் போட்டி
  8. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை தினசரி ரயில் சேவை: மே 2 முதல் துவக்கம்
  9. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  10. திருவண்ணாமலை
    சுட்டெரிக்கும் வெயிலில் கிரிவலப் பாதை தூய்மைப் பணியில் ஈடுபட்ட தூய்மை...