/* */

திருச்சியில் லஞ்ச வழக்கில் தலைமை காவலருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை

திருச்சியில் லஞ்சம் வாங்கிய வழக்கில் தலைமை காவலருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

HIGHLIGHTS

திருச்சியில் லஞ்ச  வழக்கில் தலைமை காவலருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை
X

திருச்சி பாலக்கரை போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருபவர் ரவி. இவர் கடந்த 2006-ம் ஆண்டு ஸ்ரீரங்கம் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்த போது, பாஸ்போர்ட் சான்றிதழ் விசாரணைக்காக சீனிவாசன் என்பவரிடம் ரூ.500 லஞ்சம் வாங்கினார். அப்போது லஞ்ச ஒழிப்பு போலீசார் ரவியை கையும் களவுமாக பிடித்து வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு சிறப்பு கோர்ட்டில் நடை பெற்று வந்தது. இதில் விசாரணை முடிந்து நீதிபதி கார்த்திகேயன் நேற்று தீர்ப்பு அளித்தார். குற்றம் சாட்டப்பட்ட போலீஸ் ஏட்டு ரவிக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பில் குறிப்பிட்டு இருந்தார்.

Updated On: 30 Nov 2021 6:04 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  2. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  3. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்
  5. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தை அள்ளித் தரும் கிவி ஜூஸ் - இனிமேல் மிஸ் பண்ணாதீங்க!
  6. ஆன்மீகம்
    பூஜை அறையை எப்போதும் சுகந்தமாக வைத்திருக்க என்ன செய்யலாம்?
  7. தேனி
    தேனியில் 4வது நாளாக மழை! வைகை அணையில் நீர் திறப்பு!
  8. இந்தியா
    இணையம் என்ன டாக்டரா..? விழிப்பு வேணும்..!
  9. குமாரபாளையம்
    இரண்டு மணி நேர மழையால் நிலவிய குளிர்ச்சி! வீடு சேதம்!
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் அம்மை நோய் ஏற்பட்டால் குணப்படுத்த என்ன செய்யலாம்?