/* */

பயணிகளுடன் பள்ளத்தில் சிக்கிய அரசு பஸ்: போக்குவரத்து பாதிப்பு

திருச்சியில் பயணிகளுடன் பள்ளத்தில் அரசு பஸ் சிக்கியதால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

HIGHLIGHTS

பயணிகளுடன் பள்ளத்தில் சிக்கிய அரசு பஸ்: போக்குவரத்து பாதிப்பு
X

திருச்சி தென்னூரில் அரசு டவுன் பஸ் பள்ளத்தில் சிக்கியது.

திருச்சி புத்தூர் நால்ரோட்டில் இருந்து சத்திரம் பஸ் நிலையத்திற்கு அரசு டவுன் பஸ் ஒன்று இன்று மாலை சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சில் சுமார் 60 பயணிகள் இருந்தனர்.தென்னூர் அரசமரத்தடி பேருந்து நிறுத்தத்திற்கு சற்று முன்பாக சிவன் கோவில் அருகே வந்த போது அந்த அரசு பேருந்து திடீர் என சாலையோர பள்ளத்தில் சிக்கி பகுதியளவு சாய்ந்த நிலையில் சாலையின் நடுவே நின்றது.

இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பேருந்து ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் பேருந்து சாய்ந்துவிடாமல் சிறிது நேரத்திற்கு பிறகு நிலைநிறுத்தப்பட்டு பள்ளத்தில் இருந்து மீண்டது. பயணிகளை பெரும் அச்சத்திற்குள்ளாகிய இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பள்ளத்தின் அருகே நடுநிலைப்பள்ளி இருப்பதால் இந்த சம்பவத்தை கருத்தில் கொண்டு அதிகாரிகள் உடனடி கவனம் செலுத்தி உடனடியாக பள்ளத்தை சரிசெய்து கொடுத்திட வேண்டுமென்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Updated On: 26 July 2022 1:58 PM GMT

Related News

Latest News

  1. ஆரணி
    தோல்வி பயத்தில் பாஜகவினர்: செல்வப் பெருந்தகை பேட்டி
  2. வீடியோ
    குலதெய்வம் ஒரு குடும்ப உறுப்பினர் இயக்குநர் Perarasu உருக்கம்...
  3. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  4. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  5. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  6. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  7. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  9. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  10. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?