/* */

திருச்சியில் கஞ்சா விற்பனை செய்த 2 வாலிபர்கள் கைது

திருச்சி கோட்டை பகுதியில் கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

திருச்சியில் கஞ்சா விற்பனை செய்த 2 வாலிபர்கள் கைது
X

திருச்சி, இ.பி.ரோடு பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக, கோட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் தலைமையிலான போலீசார், அப்பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது இ.பி.ரோட்டில் உள்ள ஒரு தியேட்டர் அருகே கஞ்சா விற்று கொண்டிருந்த காமராஜர் நகரைச் சேர்ந்த கதிரேசன் (வயது 19) என்ற வாலிபரை மடக்கிப் பிடித்தனர். அவரிடம் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல், திருச்சி பாபு ரோடு பகுதியில், ஒரு திருமண மண்டபம் அருகே கஞ்சா விற்றதாக, கமலா நேரு நகரைச் சேர்ந்த பாக்கியராஜ் (வயது 26) என்ற வாலிபரையும், போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்தும் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 5 Nov 2021 5:30 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. கோவை மாநகர்
    கோவை நகரில் நள்ளிரவு பெய்த மிதமான மழை: மின்னல் தாக்கி தீப்பிடித்த...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. செய்யாறு
    செய்யாறு கல்வி மாவட்டத்தில் 89.25 சதவீத மாணவர்கள் தேர்ச்சி
  6. திருவண்ணாமலை
    மாதந்தோறும் ஊதியம் வழங்க கோரி தூய்மை பணியாளர்கள் கலெக்டரிடம் மனு
  7. வீடியோ
    🔴LIVE : டெல்லியில் Kejirwalai-யை கிழித்து தொங்கவிட்ட Annamalai...
  8. செங்கம்
    திருவண்ணாமலை மாவட்டத்தில் பனை ஓலை பாடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்...
  9. நாமக்கல்
    பாக்கு மரத்தில் கோடையில் பூச்சி நோய் கட்டுப்பாடு: 9ம் தேதி இலவச...
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை: பகவான் ரமண மகரிஷி ஆராதனை விழா