/* */

திருச்சியில் 5-வது நாளாக விவசாயிகள் நாமம் போட்டு உண்ணாவிரதம்

திருச்சியில் அய்யாக்கண்ணு தலைமையில் 5-வது நாளாக விவசாயிகள் நாமம் போட்டு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

HIGHLIGHTS

திருச்சியில் 5-வது நாளாக விவசாயிகள் நாமம் போட்டு உண்ணாவிரதம்
X

நாமம் போட்டு நூதன முறையில் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள்.

மத்திய அரசு கொண்டு வந்த 3 புதிய வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும். விவசாய விளை பொருட்களுக்கு இரண்டு மடங்கு இலாபம் தர வேண்டும். மழையினால் அழிந்து வரும் 10 லட்சம் நெல் மூட்டைகளை அரசு உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும்.

உத்திர பிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் மாவட்டம் திகுன்னியா அருகில் பன்வீர்பூரில் விவசாயிகளை கொன்றவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள், திருச்சி அண்ணாமலை நகரில் கடந்த 12-ஆம் தேதி முதல் 46 நாட்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் 5ஆம் நாளான இன்று விவசாயிகள் மத்திய அரசு விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்காமல் நாமம் போட்டுவிட்டது என்பதை சுட்டிக்காட்டும் விதமாக அவர்களது நெற்றியிலும், உடலிலும் நாமம் போட்டுகொண்டு நூதன முறையில் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On: 16 Oct 2021 6:30 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    இந்தியாவின் தேசிய பறவை மயிலை கொன்றால் எத்தனை ஆண்டு சிறைத்தண்டனை...
  2. இந்தியா
    இந்தியாவின் தேசிய விலங்கு புலிகள் ஊருக்குள் புகுவது ஏன்?
  3. கரூர்
    கரூர் எம்பி தொகுதியில் இதுவரை ரூ1.35 கோடி பணம் பரிசு பொருள் பறிமுதல்
  4. கோவை மாநகர்
    ஆரத்தி எடுத்த பெண்ணிற்கு பணம் கொடுத்தது குறித்து அண்ணாமலை விளக்கம்..!
  5. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் வாக்களிக்க நூதன வரவேற்பளித்த அரசு அதிகாரிகள்..!
  6. குமாரபாளையம்
    புனித வெள்ளியையொட்டி நடந்த சிலுவைப்பாதை..!
  7. லைஃப்ஸ்டைல்
    உளுந்துண்டு வாழ்ந்தால் வளம்காணும் உடலே..! எப்டீ? படீங்க..!
  8. நாமக்கல்
    தி.மு.க. அரசின் நலத்திட்டங்கள் பற்றி ராஜேஷ்குமார் எம்.பி. பேச்சு
  9. கோவை மாநகர்
    ஆரத்திக்கு அண்ணாமலை பணம் கொடுத்தாரா? விசாரணை நடத்த ஆட்சியர் உத்தரவு
  10. இந்தியா
    கங்கை நதி பற்றி இதுவரை தெரியாத உண்மைகள் இங்கே கட்டுரையாக...