/* */

போலி பாஸ்போர்ட்டில் துபாய் செல்ல முயன்றவர் விமான நிலையத்தில் கைது

திருச்சி விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட் மூலம் துபாய் செல்ல முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

போலி பாஸ்போர்ட்டில்   துபாய் செல்ல முயன்றவர் விமான நிலையத்தில் கைது
X

திருச்சி விமான நிலையம் (பைல் படம்)

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் திருச்சியில் இருந்து துபாய் செல்வதற்காக திருச்சி விமான நிலையத்திற்கு வந்த வாலிபரிடம் அவரது பாஸ்போர்ட்டை அதிகாரிகள் தணிக்கை செய்து பார்த்ததில், பாஸ்போர்ட்டில் அவரது பெயர் முகமத் முஜிபூர் தந்தை பெயர் ரெய்னா முகமது‌ என போலி பெயர்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக குடியேற்ற தணிக்கை பிரிவு அதிகாரிகள் அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் போலியான பெயர் மற்றும் தந்தை பெயரை மாற்றி பாஸ்போர்ட் எடுத்து கொண்டு துபாய் செல்ல இருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில் அவரது உண்மையான பெயர் முஜிபூர் ரகுமான், தந்தை பெயர் அப்துல் காதர், சல்லி மலை, ராமநாதபுரம், மாவட்டம் என தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து திருச்சி விமான நிலைய காவல் நிலையத்தில் போலி பாஸ்போர்ட் எடுத்துக்கொண்டு வெளிநாடு செல்ல முயன்ற வாலிபர் மீது அதிகாரிகள் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 1 Dec 2021 5:06 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    எப்போதும் குழந்தைகளுடன் உறங்கும் பெற்றோரா நீங்கள்? இதை படியுங்க..!
  2. லைஃப்ஸ்டைல்
    மனைவியுடன் சண்டையில் கணவன் தோற்பது சகஜமப்பா..! அது பெருந்தன்மை..!
  3. மானாமதுரை
    வெளி நாட்டில் வேலைக்கு சென்ற கணவரை மீட்க , மனைவி மனு!
  4. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான சுவையில் வாழைப்பூ வடை செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    பல் பிரச்னைகளுக்கு வீட்டு வைத்தியம் என்னென்ன?
  6. குமாரபாளையம்
    பேருந்து நிலையத்தில் இட பற்றாக்குறை, வழியில் நிற்கும் பேருந்துகளால்...
  7. லைஃப்ஸ்டைல்
    நொச்சி இலையின் மருத்துவ குணங்கள் பற்றி தெரியுமா?
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து வசதி இல்லை;...
  9. கிணத்துக்கடவு
    கேரளாவில் பறவை காய்ச்சல் ; கோவை மாவட்ட எல்லைகளில் சோதனை தீவிரம்
  10. வணிகம்
    வியாபாரத்தில் தரமும் நம்பிக்கையும் இரண்டு கண்கள்..!