/* */

திருச்சியில் காவல் துறை சார்பில் மாணவர்களுக்கு கட்டுரைப்போட்டி

திருச்சியில் காவல் துறை சார்பில் மாணவர்களுக்கு கட்டுரைப்போட்டி நடத்தப்பட்டது.

HIGHLIGHTS

திருச்சியில் காவல் துறை சார்பில் மாணவர்களுக்கு கட்டுரைப்போட்டி
X

கட்டுரை போட்டியை திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் பார்வையிட்டார்.

திருச்சி மாநகரத்தில் காவல்துறை சார்பில் 'காவலர் வீரவணக்க நாள்-2022" முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்ற கட்டுரை மற்றும் ஓவியபோட்டிகள் நடைபெற்றது.

தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் சைலேந்திர பாபு காவலர் வீரவணக்க நாள்-2022 ஐ முன்னிட்டு காவல்துறை சார்பில் கட்டுரை போட்டி, ஓவியபோட்டி போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி சிறப்பிக்க உத்தரவிட்டார்.இந்த உத்தரவின் பேரில், திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் அறிவுரைகளின்படி, திருச்சி மாநகர ஆயுதப்படை வளாகத்தில் 'மாநில வளர்ச்சியில் காவல்துறையின் பங்கு" என்ற தலைப்பின் கீழ் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் கட்டுரை போட்டியும், 'காவல் பணிகள் என்ற தலைப்பின் கீழ் ஓவியப் போட்டியும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

அதன்பேரில், திருச்சி மாநகர ஆயுதப்படை வளாகத்தில் 15.10.22-ம் தேதி காவலர் வீரவணக்க நாள்-2022 ஐமுன்னிட்டு மாணவ-மாணவிகள் கலந்து கொள்ளும் 'மாநில வளர்ச்சியில் காவல்துறையின் பங்கு" என்ற தலைப்பின் கீழ் கட்டுரை போட்டியும், 'காவல் பணிகள்" என்ற தலைப்பின் கீழ் ஓவியப் போட்டியும் இன்று நடைபெற்றது. இந்த போட்டிகைளை திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் துவக்கி வைத்து பார்வையிட்டார்.

இந்த கட்டுரை போட்டியில் 15 மாணவ-மாணவிகளும், ஓவியப்போட்டியில் 55 மாணவ-மாணவிகளும் என 70 மாணாக்கர்கள் கலந்து கொண்டனர். இந்த போட்டிகளில் திருச்சி மாநகரில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

மேற்படி கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகளில் வெற்றிபெற்ற முதல் 3 மாணாக்கர்களுக்கு திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் பரிசுகளையும், வாழ்த்துகளையும் வழங்க உள்ளார். பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் எப்போது வழங்கப்படும் என்பது பின்னர் அறிவிக்கப்படும் என மாநகர காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிகழ்ச்சியில் திருச்சி மாநகர தலைமையக காவல் துணை ஆணையர். ஆயுதப்படை கூடுதல் காவல் துணை ஆணையர் திருச்சி மாநகரம் கே.கே.நகர் காவல் சரக உதவி ஆணையர் மற்றும் கே.கே.நகர் அரசு உயர்நிலை பள்ளியின் தலைமை ஆசிரியர் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

Updated On: 16 Oct 2022 3:16 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நீரிழிவு நோயாளிகள் நிலக்கடலை சாப்பிடலாமா? தெரிஞ்சுக்கங்க..!
  2. கோவை மாநகர்
    கோவையில் மழை வேண்டி சிறப்பு தொழுகை: மரக்கன்றுகள் வழங்கிய தமுமுக
  3. ஈரோடு
    மே தினத்தில் விடுமுறை அளிக்காத 81 நிறுவனங்கள் மீது வழக்கு
  4. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. நீலகிரி
    கோடை சீசன் துவக்கம். நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்!
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  8. ஈரோடு
    பவானி அருகே சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்த அரசுப் பேருந்து
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தின கொண்டாட்டங்கள்