/* */

ரயில் முன் பாய்ந்து இன்ஜினியர் தற்கொலை: ரயில்வே போலீசார் விசாரணை

திருச்சியில் ரயில் முன் பாய்ந்து இன்ஜினியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

ரயில் முன் பாய்ந்து இன்ஜினியர் தற்கொலை: ரயில்வே போலீசார் விசாரணை
X

பைல் படம்.

திருச்சி எடமலைப்பட்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் (வயது 30). இவர் என்ஜினீயரிங் படித்து முடித்து விட்டு திருச்சியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அவர், தான் வேலை செய்த நிறுவனத்தில் அதிகமானோருக்கு கடன் பெற்று கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பிரபாகரனுக்கு அதிக கடன் உள்ளதாகவும் தெரிகிறது. இதனால், யாரிடமும் சரியாக பேசாமல் சோகத்தில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று அதிகாலை எழுந்த பிரபாகரன், வீட்டின் அருகே உள்ள ரயில் தண்டவாளத்திற்கு சென்றார். அப்போது தாம்பரத்தில் இருந்து, நாகர்கோவில் நோக்கி சென்ற ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். தகவலின் பேரில் ரயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லட்சுமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிரபாகரன் உடலை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதே போல, திருச்சி சிந்தாமணி பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (வயது 32) என்பவர் காவிரி பாலம் அருகே ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலையும் திருச்சி ரயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் தலைமையிலான போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 24 Dec 2021 4:15 AM GMT

Related News