திருச்சியில் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்
Demonstrative Speech - திருச்சியில் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
HIGHLIGHTS
Demonstrative Speech -திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று காலை தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாவட்ட செயலாளர் ராயல் ராஜா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய அரசு சாதிவாரியான கணக்கெடுப்பை உடனே நடத்த வேண்டும் உயர் சாதி ஏழைகளுக்கு மத்திய அரசால் வழங்கப்பட்ட 10% இட ஒதுக்கீட்டை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக ஜனநாயக சமூக நல கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சம்சுதீன் கலந்து கொண்டு பேசினார்.
மேலும் மாவட்டத் தலைவர் முரளி ராவணன், மேற்கு மாவட்ட செயலாளர் பரத் பொன்னுச்சாமி. பிரனவேந்திரன், சரவணன், ஜெனி ,ஞ்சித் கராத்தே மனோகர் ,ராஜேஷ், ஸ்ரீரங்கம் சரவணகுமார் ராஜ்குமார் உள்ளிட்டோர் திரளாக உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.ஆர்ப்பாட்ட முடிவில் சரண் நன்றி கூறினார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2