/* */

திருச்சி உறையூர் பாளையம் பஜார் சாலையை சீரமைக்க கவுன்சிலர் கோரிக்கை

திருச்சி உறையூர் பாளையம் பஜார் சாலையை தற்காலிகமாக சீரமைக்க கவுன்சிலர் சுரேஷ்குமார் கோரிக்கை வைத்துள்ளார்.

HIGHLIGHTS

திருச்சி உறையூர் பாளையம் பஜார் சாலையை சீரமைக்க கவுன்சிலர் கோரிக்கை
X

மேயரிடம் கோரிக்கை மனு அளித்தார் கவுன்சிலர் சுரேஷ்குமார்.

திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் இன்று காலை பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மேயர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. அப்போது திருச்சி மாநகராட்சி 23-வது வார்டு கவுன்சிலர் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி) சுரேஷ்குமார் மேயரிட ஒரு கோரிக்கை மனுவை அளித்தார்.

அந்த மனுவில் திருச்சி மாநகராட்சி 23வது வார்டு உறையூர் பாளையம் பஜார் சாலை முக்கிய சாலைக்கு இணையான சாலையாக உள்ளது. இந்த சாலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய் பதித்தல் மற்றும் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் அனைத்தும் மிக தாமதமாக நடைபெறுவதால் மக்கள் போக்குவரத்திற்கு மிகுந்த சிரமம் அடைகிறார்கள். ஆகவே இந்த பாதையில் தற்காலிக சாலை அமைத்து பணிகளை விரைவுபடுத்த வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

Updated On: 27 Jun 2022 11:59 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    எடப்பாடிக்கே துரோகம் செய்த நிர்வாகிகள் | எதிர்பார்க்காத அதிமுக தலைமை |...
  2. ஆன்மீகம்
    காற்றின் அலைவரிசையில் கடவுளோடு பேசுவோம்..!
  3. தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
  4. திருமங்கலம்
    சோழவந்தானில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர்...
  5. கோயம்புத்தூர்
    தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில்...
  6. தமிழ்நாடு
    எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை...
  7. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் அதிமுக சார்பில் கோடை கால தண்ணீர் பந்தல் திறப்பு
  8. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை
  9. ஈரோடு
    ஈரோடு: கடம்பூர் மலைப்பகுதியில் அரசு பேருந்தை வழிமறித்த யானையால்
  10. தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் வரவேற்பு