/* */

திருச்சி மாநகரில் குற்றங்களை தடுப்பது பற்றிய ஆலோசனை கூட் டம்

திருச்சி நகரில் குற்றங்களை தடுக்க ஆட்டோ ஓட்டுனர்கள், வியாபாரிகளுடன் போலீசார் ஆலோசனை கூட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

திருச்சி மாநகரில் குற்றங்களை தடுப்பது பற்றிய ஆலோசனை கூட் டம்
X

திருச்சியில் குற்றத்தடுப்பு பணிகள் தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடத்தினர்.

திருச்சி மாநகர் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் இன்று மாலை திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே உள்ள ரவி மினி ஹாலில் திருச்சி மாநகர சட்டம் ஒழுங்கு போலீஸ் துணை ஆணையர் சக்திவேல் தலைமையில், சட்டம்-ஒழுங்கை காக்கவும், குற்ற சம்பவங்களை தடுப்பது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.


இந்தக் கூட்டத்தில் கோட்டை பகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் பழைய இரும்பு உள்ளிட்ட கத்தி, அரிவாள் போன்ற பொருட்கள் விற்பனை செய்யும் வியாபாரிகளை அழைத்து அவர்களுக்கு குற்றங்களை தடுப்பதற்கு தங்களால் ஆன உதவிகளை செய்வது குறித்து பல்வேறு ஆலோசனைகள் வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் கோட்டை சரக போலீஸ் உதவி கமிஷனர் சுப்பிரமணியன், கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தயாளன், சப்-இன்ஸ்பெக்டர்கள் சுப்பிரமணியன், சண்முகம் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 28 Sep 2021 2:30 PM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?