/* */

திருச்சி பிராட்டியூரில் பெண்ணை தாக்கியதாக பா.ஜ.க. நிர்வாகி கைது

திருச்சி பிராட்டியூரில் பெண்ணை தாக்கியதாக பா.ஜ.க. நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

திருச்சி பிராட்டியூரில்  பெண்ணை தாக்கியதாக பா.ஜ.க. நிர்வாகி கைது
X

திருச்சி பிராட்டியூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் ஜெயக்கொடி (வயது 62). அதேபகுதியை சேர்ந்தவர் பரமசிவம் (வயது 49). அதே பகுதியில் பா.ஜ.க. மண்டல் தலைவராக உள்ளார். இருவரும் ஒரே தெருவில் பக்கத்து, பக்கத்து வீட்டில் வசித்து வருகின்றனர். ஜெயக்கொடி ஆடு, பரமசிவத்தின் வீட்டு அருகே சென்று உள்ளது. இதற்கு ஏன் இங்கு ஆடு வருகிறது என்று பரமசிவம் ஜெயக்கொடியிடம் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றியதில் பரமசிவம் ஜெயக்கொடியை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ஜெயக்கொடி திருச்சி செஷன்ஸ் கோர்ட் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மோகன் வழக்கு பதிவு செய்து பரமசிவத்தை கைது செய்தார். தாக்கப்பட்ட ஜெயக்கொடி திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

Updated On: 31 Oct 2021 5:53 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  2. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  4. வீடியோ
    🔥 Delhi-யில் அடித்த Annamalai அலை!😳 மிரண்டுபோன BJP தலைமை |...
  5. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    50 சிறந்த மகளிர் தின வாழ்த்துச் செய்திகள்!
  7. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை
  8. நாமக்கல்
    பரமத்தி அருகே குடும்ப பிரச்சினையால் கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு ...
  9. உலகம்
    பூமி தன்னை பார்த்துக் கொள்ளும் ; மனிதனே உன்னை பார்த்துக்கொள்..!
  10. நாமக்கல்
    ப.வேலூரில் போலீசாருக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி முகாம்..!