/* */

திருச்சியில் மண் வளத்தை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருச்சியில் மண் வளத்தை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

HIGHLIGHTS

திருச்சியில் மண் வளத்தை பாதுகாப்பது  குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
X
திருச்சியில் மண் தினத்தையொட்டி திருநங்கைகளுக்கு பழ மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

திருச்சியில் டிசம்பர் 5 உலக மண் தினம் மற்றும் தன்னார்வலர்கள் தினத்தை முன்னிட்டு அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் மற்றும் மாற்றம் அமைப்பின் சார்பில் திருநங்கைகளுக்கு பழ வகைகளில் மரகன்றுகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

இயற்கை வளங்களில் மிக முக்கியமானது மண். இந்த மண் வளத்தை பாதுகாப்பது மிக முக்கியமானது. மண்வளம் மாசடைந்தால் பூமியில் வாழும் மனிதர்கள் பறவைகள் மற்றும் அனைத்து வகையிலான உயிரினகளுக்கு உண்ண உணவு கிடைக்காது. நல்ல தண்ணீர் கிடைக்காது. ஆகவே இந்த பூமியில் வாழும் நாம் ஒவ்வொருவரும் இந்த மண் வளத்தை பாதுகாக்க வேண்டும். இந்த பூமியை பசுமையாக வைத்து கொள்ள வேண்டும். ஆகவே இதை உணர்ந்து இயன்ற வரை சிறு இடங்களில் கூட சிறு மரகன்றுகளை நட்டு வளர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் மற்றும் மாற்றம் அமைப்பின் சார்பில் கொய்யா மாதுளை உள்ளிட்ட பழவகையிலான மரகன்றுகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த சமூகத்தில் பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தி வரும் திருநங்கைகளுக்கு இந்த பழவகையிலான மரகன்றுகள் வழங்கப்பட்டது. இம்மரகன்றுகளை திருநங்கைகள் தங்களது பகுதியில் நட்டு வளர்க்க ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.

இந்நிகழ்வானது திருச்சி மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் திருச்சி மாவட்ட சமூக நல அலுவலர் நித்யா கலந்து கொண்டு பழவகையிலான மரகன்றுகளை திருநங்கைகளுக்கு வழங்கினார்.

இந்நிகழ்வில் சேவ் டிரஸ்டின் நிர்வாக இயக்குநர் திருநங்கை கஜோல் தலைமையில் திருநங்கைகள் திரளாக கலந்து கொண்டு மரகன்றுகளை பெற்று கொண்டனர். மேலும் இந்நிகழ்வில் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் மாற்றம் அமைப்பின் நிர்வாகியும் நடிகருமான ஆர். ஏ. தாமஸ் அமைப்பின் மகளிர் பிரிவு செயலாளர் வழக்கறிஞர் கார்த்திகா இணை செயலாளர் அல்லி கொடி, அனுஷ்மா,நந்தினி மைக்கேல் மணி கார்த்தி மற்றும் திரளான திருநங்கைகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

நிகழ்வின் முடிவில் இயன்றதை கொடுப்போம் இல்லாதவர்களுக்கு, விளம்பரம் இல்லாமல் இயற்கை வளங்களை பாதுகாப்பது நமது ஒவ்வொருவருடைய கடமை என்பதை உணர்ந்து செயல்படுவோம் என்கிற உறுதி மொழியையும் எடுத்து கொண்டனர். சமூக மாற்றத்திற்காக பாடுபடும் அனைத்து சமூக ஆர்வலர்களுக்கும் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் மற்றும் மாற்றம் அமைப்பின் சார்பில் உலகமண் தினம் மற்றும் உலக தன்னார்வலர்கள் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.

Updated On: 5 Dec 2022 3:47 PM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?