/* */

திருச்சியில் பட்டப்பகலில் ஓட, ஓட விரட்டி இளைஞர் வெட்டிக்கொலை

திருச்சியில் பட்டப்பகலில் ஓட, ஓட விரட்டி இளைஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

திருச்சியில் பட்டப்பகலில் ஓட, ஓட விரட்டி இளைஞர் வெட்டிக்கொலை
X

திருச்சி உறையூரில் இளைஞர் பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்டார்.

திருச்சி உறையூர் பஞ்சவர்ண சுவாமி கோவில் பகுதி டாக்கர் ரோட்டை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் சண்முகம் (வயது 28 ).இவர் குதிரை ரேஸ் வண்டியை வாடகைக்கு விட்டு அதன் மூலம் வருமானம் தேடி வந்தார்.

இந்த நிலையில் இன்று மதியம் 12 மணியளவில் உறையூர் பஞ்சவர்ணசாமி கோவில் மார்க்கெட் பகுதியில் சண்முகம் நடந்து சென்று கொண்டிருந்தார் .அப்போது திடீரென அங்கு மூன்று
மர்ம நபர்கள் வந்தனர். அவர்கள் சண்முகத்தை தாங்கள் வைத்திருந்த அரிவாளை எடுத்து சரமாரியாக வெட்டினார்கள்.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சண்முகம் அலறி அடித்துக் கொண்டு ஓடினார். அந்த கும்பல் அவரை ஓட ஓட விரட்டியது. கும்பலிடம் இருந்து தப்பிப்பதற்காக அந்த பகுதியில் உள்ள ஒரு டீக்கடைக்குள் சண்முகம் புகுந்தார். ஆனால் அங்கும் விடாமல் அவரை அந்த கும்பல் சுற்றி வளைத்து பிடித்து சரமாரியாக அரிவாளால் வெட்டியது. இதில் சம்பவ இடத்திலேயே சண்முகம் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

பட்டப் பகலில் நடந்த இந்த கொலை சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை கண்ட பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்து அலறி அடித்து ஓடினார்கள். இது பற்றிய தகவல் அறிந்ததும் உறையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர் .அவர்கள் சண்முகத்தின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக ஒரு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

போலீசார் நடத்திய விசாரணையில் குதிரை ரேஸ் பந்தயம் தொடர்பாக ஏற்பட்ட முன் விரோதத்தின் காரணமாக சண்முகம் வெட்டி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது . கொலையாளிகள் யார், எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்ற விவரம் உடனடியாக கிடைக்கவில்லை.

Updated On: 26 May 2023 1:41 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்