/* */

சரியான உணவு சாப்பிடுவது பற்றிய முக நூல் குழுமம் திருச்சியில் துவக்கம்

சரியான உணவு சாப்பிடுவது பற்றிய முக நூல் குழுமம் திருச்சியில் உணவு பாதுகாப்பு துறை சார்பில் துவங்கப்பட்டது.

HIGHLIGHTS

சரியான உணவு சாப்பிடுவது பற்றிய முக நூல் குழுமம் திருச்சியில் துவக்கம்
X

சரியான உணவு சாப்பிடுவது பற்றிய முக நூல் குழுமம் உணவு பாதுகாப்பு துறை மூலம் திருச்சி  மாவட்ட கலெக்டரால் இன்று துவக்கி வைக்கப்பட்டது.

திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பில் 'ஈட் ரைட் திருச்சிராப்பள்ளி ஃபேஸ்புக் குரூப்' என்கிற முகநூல் குழுமம் துவக்க விழா இன்று நடைபெற்றது. விழாவிற்கு திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு துறையின் நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ் பாபு தலைமை தாங்கினார். இந்நிகழ்வில் திருச்சி மாவட்ட ஆட்சியர் மா. பிரதீப் குமார் கலந்து கொண்டு புதிய முகநூல் குழுமத்தின் லோகோவை வெளியிட்டு வாழ்த்தி பேசினார்.

இந்த முகநூல் பக்கத்தில் திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு துறையின் அன்றாட செயல்பாடுகள் பதிவிடப்பட்டிருக்கும். மேலும் பொதுமக்கள், மாணவர்கள் சரியான ஆரோக்கியமான பாதுகாப்பான உணவுகளை எப்படி சாப்பிட வேண்டும் என்பது பற்றிய குறிப்புகளும் இடம் பெற்றிருக்கும். மாணவர்கள் இதனை பின்பற்றுபவர்களாகவும், விரும்புவர்களாகவும் இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் ஹோட்டல் மற்றும் இனிப்பாகங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் வடிவேல், வசந்தன்,ரங்கநாதன், அன்பு செல்வன், இப்ராஹிம், பாண்டியன், ஸ்டாலின் ,செல்வராஜ் ஆகியோர் செய்து இருந்தனர்.

Updated On: 5 July 2022 3:26 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    இந்தியாவின் தேசிய விலங்கு புலிகள் ஊருக்குள் புகுவது ஏன்?
  2. கரூர்
    கரூர் எம்பி தொகுதியில் இதுவரை ரூ1.35 கோடி பணம் பரிசு பொருள் பறிமுதல்
  3. கோவை மாநகர்
    ஆரத்தி எடுத்த பெண்ணிற்கு பணம் கொடுத்தது குறித்து அண்ணாமலை விளக்கம்..!
  4. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் வாக்களிக்க நூதன வரவேற்பளித்த அரசு அதிகாரிகள்..!
  5. குமாரபாளையம்
    புனித வெள்ளியையொட்டி நடந்த சிலுவைப்பாதை..!
  6. லைஃப்ஸ்டைல்
    உளுந்துண்டு வாழ்ந்தால் வளம்காணும் உடலே..! எப்டீ? படீங்க..!
  7. நாமக்கல்
    தி.மு.க. அரசின் நலத்திட்டங்கள் பற்றி ராஜேஷ்குமார் எம்.பி. பேச்சு
  8. கோவை மாநகர்
    ஆரத்திக்கு அண்ணாமலை பணம் கொடுத்தாரா? விசாரணை நடத்த ஆட்சியர் உத்தரவு
  9. இந்தியா
    கங்கை நதி பற்றி இதுவரை தெரியாத உண்மைகள் இங்கே கட்டுரையாக...
  10. ஈரோடு
    புனித வெள்ளியையொட்டி ஈரோட்டில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை