/* */

திருச்சி கருமண்டபத்தில் நடந்து சென்ற பெண்ணிடம் 9 பவுன் செயின் பறிப்பு

திருச்சி கருமண்டபத்தில் சாமி கும்பிட்டு விட்டு நடந்து சென்ற பெண்ணிடம் 9 பவுன் செயினை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.

HIGHLIGHTS

திருச்சி கருமண்டபத்தில் நடந்து சென்ற பெண்ணிடம் 9 பவுன் செயின் பறிப்பு
X

திருச்சி கருமண்டபம் ஆர்.எம்.எஸ். காலனி அசோக் நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். சத்திரம் பஸ் நிலையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி விஜயா (வயது 59). இவர் சம்பவத்தன்று மாலை திருச்சி திண்டுக்கல் சாலை கருமண்டபத்தில் உள்ள கோயிலுக்கு சாமி கும்பிடுவதற்காக நடந்து சென்றார்.

தொடர்ந்து சாமி கும்பிட்டு விட்டு பின்னர், மீண்டும் வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது அவரை பின்தொடர்ந்து பைக்கில் சென்ற மர்ம ஆசாமி, விஜயா கழுத்தில் இருந்த 9 பவுன் செயினை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் தப்பினர். இதுகுறித்த புகாரின் பேரில் கண்டோன்மென்ட் குற்றப்பிரிவு போலீசார் வழக்குபதிந்து மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Updated On: 16 Jan 2022 6:14 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    7 ஆண்டுகளாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாத மயிலாடுதுறை காங்கிரஸ்...
  2. திருச்சிராப்பள்ளி
    திருச்சி தொகுதியில் 38 வேட்புமனுக்கள் ஏற்பு, 10 வேட்புமனுக்கள்...
  3. தேனி
    தமிழகத்தில் பாமக எவ்வளவு வலுவாக உள்ளது?
  4. தமிழ்நாடு
    எதிர்க்கட்சிகளை குறி பார்த்து அடிக்கும் பாஜக: அரசியல் விமர்சகர்கள்
  5. அரசியல்
    தென்சென்னையில் கரையேறுவாரா தமிழிசை?
  6. திருவண்ணாமலை
    தேர்தல் ஆணைய கைபேசி செயலி பயன்படுத்த ஆட்சியர் அறிவுரை
  7. காஞ்சிபுரம்
    சங்கரா கல்வி அறக்கட்டளை நிறுவனத்திற்கு தனியார் நிறுவனம் ரூ.1 கோடி...
  8. சிங்காநல்லூர்
    தோல்வி பயத்தில் வேட்பு மனுவை நிராகரிக்க சொல்கிறார்கள்: அண்ணாமலை...
  9. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 53 அடியாக சரிவு
  10. திருவண்ணாமலை
    வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி