/* */

திருச்சி ஹோலிகிராஸ் கல்லூரியில் 48 மணிநேர உலக சாதனை தொடர் கவியரங்கம்

திருச்சி ஹோலிகிராஸ் கல்லூரியில் "48 மணிநேர உலக சாதனை தொடர் கவியரங்கம்" இணைய வழியில் தொடங்கி நடந்தது.

HIGHLIGHTS

திருச்சி ஹோலிகிராஸ் கல்லூரியில் 48 மணிநேர உலக சாதனை தொடர் கவியரங்கம்
X
திருச்சி ஹோலிகிராஸ் கல்லூரி (கோப்பு படம்)

அரியலூர் தமிழ் அமுது அறக்கட்டளை மற்றும் திருச்சி புனித சிலுவை தன்னாட்சி கல்லூரி தமிழாய்வுத்துறை இணைந்து நடத்தும் "48 மணிநேர உலக சாதனை தொடர் கவியரங்கம்" நேற்று 23-ந்தேதி தொடங்கி இன்று 24-ந்தேதி வரை"உலகின் உன்னத உறவு" எனும் தலைப்பில் இணையவழியே தொடர்ந்து நடைபெற்றது.

இந்த விழாவிற்கு புனித சிலுவை தன்னாட்சி கல்லூரி முதல்வர் முனைவர் கிறிஸ்டினா பிரிஜித் தலைமை தாங்கினார். கல்லூரி செயலர் முனைவர் ஆனி சேவியர் முன்னிலை வகித்தார். கல்லூரி தமிழாய்வுத்துறைத் தலைவர் முனைவர் ஜெஸின் பிரான்சிஸ் வாழ்த்துரை வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்கு தஞ்சை மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரியின் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர், முனைவர் மதுரை சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரை வழங்கினார்.

இந்த இணைய வழி நிகழ்ச்சியில் புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவியர், பிற கல்லூரி மாணவ மாணவிகள், பொதுநிலையினர் ஆகியோர் கலந்துகொண்டு கவிபாடினர். இதற்கான இணைய வழி ஏற்பாடுகளை முனைவர்கர் ஜெஸிந்தாராணி, பிரேமா, தேவதா, சுஜாதா ஆகியோர் செய்திருந்தனர். இதன் நிறைவு விழா நாளை 25-ந்தேதி காலை 9 மணியளவில் நடைபெறவுள்ளது.

Updated On: 24 Oct 2021 12:45 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    87 வயதிலும் இறைகடன் செய்த போப் ஆண்டவர்..!
  2. செய்யாறு
    கல்குவாரி அலுவலகத்தை சேதப்படுத்திய இருவர் கைது
  3. வணிகம்
    புதிய நிதியாண்டில் முக்கிய நிதி மாற்றங்கள் என்ன தெரியுமா..?
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் வாக்குச்சாவடி மையங்களை பார்வையிட்ட கலெக்டர் உமா
  5. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சோபா,பெட் தயாரிக்கும் கடையில் திடீர் தீ விபத்து
  6. கும்மிடிப்பூண்டி
    ஊத்துக்கோட்டையில் அனுமதி பெறாமல் வாடகைக்கு செல்ல இருந்த 5 வாகனங்கள்...
  7. தென்காசி
    அதிமுகவிற்கு பொதுவுடமை நாம் தமிழர் கட்சி தலைவர் சஞ்சீவிநாதன் ஆதரவு
  8. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையம் சுகாதார நிலையம் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
  9. இராஜபாளையம்
    திமுக வேட்பாளருக்கு ஆதரவாக ராஜபாளையத்தில் தமிழக அமைச்சர் பிரச்சாரம்
  10. கோவை மாநகர்
    40 இடங்களிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் : கோவையில் பேசிய கனிமொழி...