/* */

தபால் நிலையங்களில் ஆதார் பதிவு செய்ய 2 நாள் சிறப்பு முகாம்

ஸ்ரீரங்கம் கோட்ட தபால் நிலையங்களில் ஆதார் பதிவு 11, 25-ம் தேதிகளில் சிறப்பு முகாம் நடக்கிறது.

HIGHLIGHTS

தபால் நிலையங்களில் ஆதார் பதிவு செய்ய 2 நாள் சிறப்பு முகாம்
X

இந்திய தபால்துறை சார்பில் பொதுமக்களின் தேவையை கருத்தில் கொண்டு, ஆதார் பதிவு தபால் நிலையங்களிலேயே செய்யப்படுகிறது.

ஸ்ரீரங்கம் தபால் கோட்டத்தில், ஸ்ரீரங்கம், துறையூர், பெரம்பலூர் தலைமை தபால் நிலையங்கள் உட்பட 33 தபால் நிலையங்களில் ஆதார் பதிவு மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்த மையங்களில், நாளை 11-ந்தேதி மற்றும் 25-ம்தேதிகளில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. முகாம்களில், புதிதாக ஆதார் பதிவு, பழைய ஆதாரில் செல்போன் எண் மாற்றம் போன்ற திருத்தங்கள் உட்பட ஆதார் சம்பந்தமான அனைத்து சேவைகளையும் மேற்கொள்ளலாம். புதிதாக ஆதார் பதிவு செய்ய கட்டணம் இல்லை, பழைய ஆதாரில் திருத்தங்கள் செய்ய வரி உட்பட ரூ.50-ம், பயோ மெட்ரிக் திருத்தங்கள் செய்ய வரி உட்பட ரூ.100 செலுத்த வேண்டும். பொதுமக்கள் தபால்துறையின் இந்த சேவைகளை பயன்படுத்திக் கொள்ளலாம். இத்தகவலை, ஸ்ரீரங்கம் தபால் கோட்ட கண்காணிப்பாளர் விஜயா தெரிவித்துள்ளார்.

Updated On: 10 Jan 2022 5:54 AM GMT

Related News

Latest News

  1. அருப்புக்கோட்டை
    காரியாபட்டியில், திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு..!
  2. பூந்தமல்லி
    திருவேற்காடு அருகே பூட்டி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனம் திருட்டு
  3. காஞ்சிபுரம்
    பேராசிரியர் ஆவது எனது விருப்பம் : அரசுப்பள்ளி மாணவன்...!
  4. காஞ்சிபுரம்
    பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 29 பள்ளிகள் நூற்றுக்கு நூறு...
  5. காஞ்சிபுரம்
    பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழில் நூற்றுக்கு நூறு ஒருவர் கூட...
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 87.55 சதவீதம்...
  7. காஞ்சிபுரம்
    ஓய்வு பெற்ற காவல்துறை சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் : எஸ்.பி...
  8. லைஃப்ஸ்டைல்
    மகன், தந்தைக்கு சேர்க்கும் புகழ் எது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    மனித உணர்ச்சிகளின் நுணுக்கங்களையும் வெளிப்படுத்தும் நா. முத்துக்குமார்...
  10. லைஃப்ஸ்டைல்
    மனதைத் திறப்பது: பாசம் வழியான பயணம்