/* */

திருச்சியில் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் கைது

திருச்சியில் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

திருச்சியில் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த  இளைஞர் கைது
X

திருச்சி எடமலைப்பட்டி புதூர் கீழபஞ்சப்பூரை சேர்ந்த 14 வயது மாணவியை நேற்று முன்தினம் மாலை முதல் காணவில்லை. பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இது குறித்து பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் எடமலைப்பட்டி புதூர் போலீசார் மாணவியை தேடி வந்தனர். இந்நிலையில் அன்றைய தினம் இரவு 9 மணியளவில் சிறுமி தானாகவே வீடு திரும்பினார். அவரிடம் பெற்றோர் விசாரித்த போது செட்டியபட்டி மேலத்தெருவை சேர்ந்த அம்மாசி மகன் பரத் (வயது 20) என்பவரது வீட்டுக்கு சென்றதாகவும், கூலித்தொழிலாளியான அவரை காதலிப்பதாகவும் கூறியுள்ளார்.

இந்நிலையில் சிறுமி வந்த தகவலை அவரது பெற்றோர் போலீசில் தெரிவித்தனர். அப்போது போலீசார் சிறுமியிடம் விசாரித்த போது மேற்கண்ட தகவல் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கை கண்டோன்மென்ட் அனைத்து மகளிர் போலீசுக்கு எடமலைப்பட்டி புதூர் போலீசார் மாற்றினர்.

பின்னர் கண்டோண்மென்ட் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்து பரத்தை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மாணவியை மருத்துவ பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Updated On: 21 Nov 2021 10:58 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...