/* */

திருச்சி கோட்டை பகுதியில் 100 கிலோ குட்கா பதுக்கிய 2 பேர் கைது

திருச்சி கோட்டை பகுதியில் 100 கிலோ குட்கா பதுக்கி வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

திருச்சி கோட்டை பகுதியில் 100 கிலோ குட்கா பதுக்கிய  2 பேர் கைது
X

திருச்சி கோட்டை பகுதியில் குட்கா பதுக்கி வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தயாளன் மற்றும் போலீசார் இன்று தேவதானம் காவிரி ரோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அவருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அதே பகுதியில் உள்ள ஒரு குடோனை சோதனை செய்தனர். இதில் கள்ளத்தனமாக அதிக விலைக்கு விற்பதற்காக ஹான்ஸ் மற்றும் விமல் ஆகிய குட்கா பொருட்கள் சுமார் 100 கிலோ அளவில் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து இந்த குட்கா பொருட்களை பறிமுதல் செய்த கோட்டை போலீசார், திருச்சி சிந்தாமணி பூசாரி தெருவை சேர்ந்த முருகன் (வயது 44), ஜாபர்ஷா தெருவை சேர்ந்த வச்சனராம் என்கிற வசந்த் (வயது 41) ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்து, கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 2 Nov 2021 3:45 PM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    வாக்குப்பதிவு மையங்களில் நேரில் ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர்
  2. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 78.16 சதவீத வாக்குப்பதிவு: முழு விபரம்...
  3. திருவண்ணாமலை
    மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன்...
  4. ஆரணி
    ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் 73.77 சதவீத வாக்குப்பதிவு
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் 73.35 சதவீத வாக்குப்பதிவு
  6. லைஃப்ஸ்டைல்
    தேநீர் தியானம்: ஜப்பானின் அமைதிக்கான ரகசியம்
  7. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  8. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  9. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  10. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!