/* */

ஆற்றில் குளிக்கச் சென்றவர் மாயம்? 3வது நாளாக தேடும் பணி தீவிரம்

திருச்சியில், ஆற்றில் குளிக்க சென்றவர் திரும்பி வராத நிலையில், 3வது நாளாக தேடும் பணி நடைபெற்று வருகிறது.

HIGHLIGHTS

ஆற்றில் குளிக்கச் சென்றவர் மாயம்? 3வது நாளாக தேடும் பணி தீவிரம்
X

 நாகராஜ்

மதுரை ஆரப்பாளையம் பகுதியை சேர்ந்தவர், நாகராஜ். சுமார் வயது 50 உள்ளவர். டைலர் வேலை பார்த்து வந்துள்ளார். திருச்சி பீம நகரில் உள்ள அவரது உறவினர் ஒருவர் இறந்து விட்டதால், அந்த காரியத்திற்காக நேற்று முன்தினம் திருச்சி வந்துள்ளார்.

பின்னர், இறந்தவரின் உடல் ஓயாமரியில் தகனம் செய்ய கொண்டு சென்றுள்ளனர். அப்போது, உடன் சென்ற நாகராஜன், அருகில் காவிரி ஆற்றில் குளிக்க சென்றுள்ளார், மீண்டும் கரைக்கு வரவில்லை. இது குறித்து புகாரின் பேரில் தீயணைப்பு துறையினர் நேற்று முன் தினம் மாலையும், நேற்று காலை முதல், மாலை வரையும் ஆற்றில் தேடி பார்த்தும் கிடைக்க வில்லை. இது குறித்து கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று 3-வது நாளாக தீயணைப்பு துறையினர், நண்பர்கள், உறவினர்கள் காவிரி ஆற்றில் தீவிரமாக தேடிவருகின்றனர்.

Updated On: 18 Dec 2021 7:19 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...