/* */

துறையூரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்

துறையூரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

துறையூரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்
X

துறையூரில் உள்ள ஒரு கடையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சோதனை நடத்தினார்.

திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தங்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மாவட்ட நியமன அதிகாரி டாக்டர் ரமேஷ்பாபு தலைமையில் துறையூர் பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு மொத்த வியாபார கடையில் சோதனை நடத்தினார்கள்.

அப்போது அங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான்மசாலா, குட்கா போன்ற புகையிலை பொருட்கள் கழிவறையில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. மொத்தம் ஐந்து கிலோ எடையுள்ள அதனை அவர்கள் பறிமுதல் செய்தனர்.

மேலும் நொச்சியம் பகுதியில் உள்ள இரண்டு கடைகளில் நடத்தப்பட்ட சோதனையில் ஒரு கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த கடையின் உரிமையாளர்களுக்கு தலா ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்யும் கடைகளுக்கு அபராதம் விதிக்கப்படுவதோடு சீல் வைக்கப்படும் என மாவட்ட நியமன அதிகாரி எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

Updated On: 16 Sep 2021 5:46 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்