/* */

கரூர் மாணவி பாலியல் பிரச்சினையில் சிக்கிய ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை

கரூர் பள்ளி மாணவி பாலியல் பிரச்சினையில் சிக்கிய ஆசிரியர் திருச்சி அருகே மாமனார் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

HIGHLIGHTS

கரூர் மாணவி பாலியல் பிரச்சினையில் சிக்கிய ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை
X

கரூரில் பள்ளி மாணவி ஒருவர் ஆசிரியரின் பாலியல் தொல்லை காரணமாக கடந்த வாரம் தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக போலீசாரும் பள்ளி நிர்வாகமும், சம்பந்தப்பட்ட ஆசிரியர் சரவணன் என்பவரிடம் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் ஆசிரியர் சரவணன் பள்ளியில் விடுப்பு எடுத்துக்கொண்டு தனது மாமனார் வீட்டிற்கு நேற்று வந்தார்.

திருச்சி மாவட்டம் துறையூர் அருகில் செங்காட்டுப்பட்டியில் உள்ள மாமனார் வீட்டில் ஆசிரியர் சரவணன் இன்று காலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்து உள்ளது. அவரது உடலை துறையூர் போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை தொடர்பாக ஆசிரியர் சரவணன் எழுதி வைத்துள்ள ஒரு கடிதத்தையும் போலீசார் கைப்பற்றி உள்ளனர். இந்த சம்பவம் கரூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Updated On: 25 Nov 2021 8:48 AM GMT

Related News

Latest News

  1. திருமங்கலம்
    சோழவந்தானில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர்...
  2. கோயம்புத்தூர்
    தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில்...
  3. தமிழ்நாடு
    எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை...
  4. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை
  5. தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் வரவேற்பு
  6. லைஃப்ஸ்டைல்
    கில்லில சொல்லி அடிக்கிறமாதிரி, சொல்லி ஜெயிச்சிக்காட்டுங்க..!
  7. தொண்டாமுத்தூர்
    நொய்யல் ஆற்றில் இருந்து முறைகேடாக தண்ணீர் எடுப்பதாக விவசாயிகள்...
  8. தமிழ்நாடு
    வெப்ப அலையில் இருந்து பாதுகாக்க மரம் வளர்ப்போம் வாங்க..!
  9. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே விநாயகர், கருப்பச்சாமி கோவில் பெருந் திருவிழா
  10. கோவை மாநகர்
    வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டதை கண்டித்து கோவையில்...