/* */

வளர்ச்சி திட்டப்பணிகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் வளர்ச்சி திட்டப்பணிகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

வளர்ச்சி திட்டப்பணிகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு
X

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு செய்தார்.

திருச்சி திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வார்டு எண். 35 ,38 ,39 ,42 ,43 ஆகியவற்றில் நடைபெற்று வரும் பணிகளை திருவெறும்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி பார்வையிட்டு பணிகளை விரைவுப்படுத்த ஆய்வு மேற்கொண்டார்

35 வார்டு எண் குழுமிரோடு பிச்சை நகர் கோல்டன்நகர் வார்டு எண் 38 பிள்ளையார்கோயில் தெரு, வடக்குபிள்ளையார் கோயில் தெரு, பாலாஜிநகர் வார்டுஎண் 39 இல் வேதாத்திரி நகர் வார்டுஎண் 42 ஆகிய பகுதிகளில் நடைபெற்றுவரும் பாதாள சாக்கடை பணி மற்றும் தார் சாலை அமைக்கும் பணிகள் பிலோமினாள் நகர் தெற்கு காட்டூர் முருகன் கோயில் தெரு பகுதியில் அமைந்து வரும் தார்சாலை பணிகளை ஆய்வு செய்தார்

பள்ளிகளில் வழங்கப்படும் காலை சிற்றுண்டி உணவுத் திட்டத்தை அரசினர் ஆதிதிராவிடர்நல ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பாப்பா குறிச்சி காட்டூர் பகுதியில் திருச்சி மாவட்டத்தில் தொடங்கி வைப்பதற்காக இடம் ஆய்வு செய்யப்பட்டது

சட்டமன்ற உறுப்பினர் தொகுதி நிதி பொது நிதியில் கட்டப்பட்டு வரும் வார்டு எண் 39 இல் பாத்திமாபுரம் பகுதியில் அமைந்து வரும் நியாய விலை கடை கட்டிடத்தை பார்வையிட்டார்

பாப்பாகுறிச்சி பகுதியில் அமைய உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் நீயாயவிலைகடை ஆகிய கட்டுமான பணிகளை பார்வையிட்டார் அதனைத் தொடர்ந்து மாநகராட்சி மண்டலம் எண் 4ல் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தை மாநகராட்சி ஆணையர் துணை ஆணையர் மற்றும் மாநகராட்சி உயர் அதிகாரிகள் மாமன்ற உறுப்பினர்களுடன் ஆய்வு கூட்டமும் நடைபெற்றது

ஆய்வின்போது மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், பொறியாளர்கள் சிவபாதம், குமரேசன் உதவி செயற்பொறியாளர் ஜெகஜீவராமன், மாநகராட்சி துணை மேயர் திவ்யா தனக்கோடி மண்டலம் மூன்றின் தலைவர் மதிவாணன் மாமன்ற உறுப்பினர்கள் நீலமேகம் தர்மராஜ், லீலாவேலு, செந்தில், ரெக்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Updated On: 10 July 2022 7:21 AM GMT

Related News

Latest News

  1. அவினாசி
    சீரான முறையில் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கலெக்டரிடம்...
  2. அவினாசி
    கல்லூரி மாணவர்களை பாதி வழியில் இறக்கிவிட்ட தனியார் பஸ்களை சிறைபிடித்த...
  3. திருப்பூர்
    12 டன் சின்ன வெங்காயத்தை கடத்திய லாரி டிரைவர் உள்ளிட்ட 2 பேர் கைது
  4. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
  5. காங்கேயம்
    இன்று முதல் போராட்டம்; வெள்ளகோவில் விவசாயிகள் முடிவு
  6. தமிழ்நாடு
    சென்னை உயர்நீதிமன்றத்துக்கு ஜூன் 2-ம் தேதி வரை கோடை விடுமுறை
  7. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களால்...
  8. திருப்பூர்
    வெயில் நேரத்தில் வெளியே போகாதீங்க; திருப்பூர் கலெக்டர் அட்வைஸ்!
  9. கீழ்பெண்ணாத்தூர்‎
    தண்ணீர் பந்தலை திறந்து வைத்த துணை சபாநாயகர்
  10. ஈரோடு
    ஈரோடு அரசு அருங்காட்சியகத்தில் தஞ்சாவூர் ஓவியக் கண்காட்சி